மேலப்பாளையத்தில் உணவு 'டெலிவரி' ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலப்பாளையத்தில் உணவு 'டெலிவரி' ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

நெல்லை மேலப்பாளை யம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துராஜ்

( வயது20).

இவர் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு முத்துராஜ் மறுத்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்

டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் முத்துராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com