search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohanlal"

    பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்திருந்தார்.

    2019 ஆம் ஆண்டு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது, நடிகர் அஜித் படப்பிடிப்பிற்கு நடுவே மோகன்லால் நடித்த மரக்கார் படத்தின் படக்குழுவினரை சந்தித்தார். அப்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

    அஜித் மோகன்லால்

    இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் - மோகன்லாலுடன் இருக்கும் புதிய வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.


    இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் மோகன்லால் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    மலையாள சினிமாவில் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போதைய இளம் கதாநாயகர்களுக்கும் போட்டியாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

    தொடர்ந்து வித்தியாசமான மற்றும் அதிரடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான அரசியல் படமான லூசிபர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

    வருடத்திற்கு இவர் நடிப்பில் 3 முதல் 4 படங்கள் உருவாகி வருகின்றன. தற்போதும் கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் கூறியிருக்கும் மோகன்லால் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சித்திக் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் பிக் பிரதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரின் தம்பி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற சில படங்களை இயக்கியவர் சித்திக். தற்போது மோகன்லாலை வைத்து ‘பிக் பிரதர்’ எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான் நடிக்கிறார்.

    பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான், சித்திக் இயக்கும் ‘பிக் பிரதர்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகை தருகிறார். இதன் கலந்துரையாடலுக்காக கேரளா வந்தார் அர்பாஸ். இதை மகிழ்ச்சியுடன், ‘சல்மான் கான் தம்பியான அர்பாஸ் கானை வரவேற்பதிலும் எங்களது படத்தில் இவர் நடிப்பதும் சந்தோ‌ஷம்‘ என சித்திக் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 



    பதிலுக்கு, ‘மலையாள சினிமா லெஜண்ட் மோகன் லாலுடன் நடிக்கப்போவதும், சித்திக் போன்றவர் இயக்கத்தில் நடிப்பதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. முதல் முறையாக ‘பிக் பிரதர்’ படம் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகை தருகிறேன். ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அர்பாஸ்கான்.
    மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் சாதனையை, தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் திரைப்படம் அதிக வசூல் செய்து முறியடித்துள்ளது.
    மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிபர்’ படம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியானது. அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்திருக்கிறது ‘லூசிபர்’.



    அதோடு ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களை நெருங்கிய வேளையில் 101 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ‘லூசிபர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்த நிலையில், 119 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
    இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் மோகன்லால் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார். #MohanLal
    இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால. அவரது நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த ‘லூசிபர்‘ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு நடிகராக ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால், விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

    மோகன்லால் இயக்கும் முதல் படத்துக்கு “ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா“ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக மோகன்லால் தனது இணையதள வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


    ஒரு நடிகராக பல்வேறு சாதனைகள் புரிந்த மோகன்லால், இயக்குநராக அடியெடுத்து வைத்ததன் மூலம் அதிலும் பல சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MohanLal #BarrozGuardianOfDGama

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, அவருடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Suriya #Kaappaan
    சூர்யா நடிப்பில் தற்போது இரு படங்கள் தயாராகி வருகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் காப்பான் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்க மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்காக மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் இருந்து லைவ் வீடியோ வெளியிடப்பட்டது. ஐதராபாத்திலிருந்து ஒளிபரப்பான இந்த நேர்காணலில் மோகன்லால் பல வி‌ஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சூர்யாவும் வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்தார்.



    காப்பான் படம் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ’இந்தப் படத்தில் பிரதமராக மோகன்லால் சார் நடித்திருக்கிறார். அவரைப் பாதுகாக்கும் கமாண்டோ வீரராக நான் நடித்திருக்கிறேன். மோகன்லால் சாரோடு நடித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்தப் படம் விடுமுறை நாளை குறிவைத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடத்திட்டமிட்டிருக்கிறோம்” என்று சூர்யா கூறினார்.
    சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ராதிகா, 34 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மோகன் லால் படத்தில் நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika
    1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். 

    மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற படம் வெளியானது. அதன் பிறகு 25 ஆண்டுகளாக அவர் மலையாளத்தில் நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.



    அவரது நடிப்பில் ‘தி கேம்பினோஸ்’ படம் கடந்த மார்ச்சில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இதில், இந்த படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறாராம். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகியிருக்கிறது. 

    அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika

    மலையாள உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலை வைத்து, நடிகர் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். #Mohanlal #Prithviraj
    இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்து ‘காப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 

    பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். நியூயார்க், பிரேசில், டெல்லி, சண்டிகர், ஐதராபாத் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடித்துள்ள லூசிபர் படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ளார். மொழி, ராவணா உள்பட பல படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 



    அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.



    இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan

    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மோகன்லால், பிரபாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். #AjithKumar
    விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    மோகன்லால் நடிக்க பிரியதர்‌ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்‌ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



    தொடர்ந்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரது அரங்கிற்கும் சென்றுள்ளார். அஜித்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ராணா நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின் போது ராணா பகிர்ந்துகொண்டதை பிரபாஸ் கூறி உள்ளார்.

    சுமார் ஒரு மணிநேரம் பிரபாசுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜித் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜித் தெரிவித்தாராம். #AjithKumar #Mohanlal #Prabhas

    கேரளாவில் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று எம்.எல்.ஏ பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Vijay #ThalapathyVijay #Mohanlal #Mammootty
    தமிழ் நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டிக்கு இணையான வரவேற்பு விஜய் படங்களுக்கும் உண்டு.

    தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படத்தின்போது விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட் அவுட்டை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வைத்தனர்.

    கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்து வருகின்றனர்.

    பிறமொழி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து கேரளாவில் அதிகமான வரவேற்பு இருப்பதை கேரள திரையுலகினர் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவில் மலையாள நடிகர்களைவிட தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து விமர்சிக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ், ‘‘மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.சி.ஜார்ஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.
    மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.



    பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva

    ×