search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekar babu"

    • வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைத்து தரப்படும்.
    • மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்த பஸ் முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

    தாம்பரம் :

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சி.எம்.டி.ஏ.வின் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் உள்ள சென்னை வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

    மேலும் முடிச்சூரில் உள்ள சீக்கனான் ஏரியை ரூ.2 கோடியிலும், ரங்கா நகர் குளத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் மேம்பாட்டு பணி தொடர்பாகவும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் ஈஸ்வரி நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், ஆலந்தூர் புது தெருவில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் நேரடியாக சென்று அமைச்சர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் முன்னதாக இந்த நிலையத்துக்கு வரும் பஸ்களின் போக்குவரத்தை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்த பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது என்னென்ன அடிப்படை தேவைகள் என்று ஒவ்வொன்றையும் ஆய்வு செய்கின்ற போது அந்த மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்த பஸ் முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

    ஆகவே, இந்த பஸ் நிலையத்திற்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோல் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்.

    ஜூன் மாத இறுதிக்குள் இதை தொடங்க வேண்டுமென்ற நிலைபாடு இருந்தாலும், பஸ் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு மக்களுடைய தேவைகள் எவையும் விட்டுவிடாமல் மக்களுடைய பயன்பாட்டிற்கு வருகின்ற போது மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குண்டான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஜூன் மாதத்திற்குள் முடிந்த அளவிற்கு ஏற்பாடுகளை முடித்து, பஸ் நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

    பணிகள் முடிந்து ஓரிரு வாரங்கள் தள்ளிப்போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாக நிச்சயமாக இந்த பஸ் நிலையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவு செய்வோம்.

    ஆகவே, குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைத்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
    • அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை வேளச்சேரி, 100 அடி புற வழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டசபையில் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

    அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று வேளச்சேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பஸ் நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப் பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை முதலமைச்சர் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும்.

    மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் , சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , அடையார் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ர மூர்த்தி, முதன்மைத் திட்ட அமைப்பாளர் அனுசுயா , மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் தகவல்கள், சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற பெயரில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது.

    48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டது.

    இந்த 2 திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்தறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    'திருக்கோவில்' செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.

    மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இந்த செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. படிப்படியாக மற்ற கோவில்களின் விவரங்களும் இணைக்கப்படும்.

    பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலின் பிரசாதம் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு சென்றடைகின்ற ஒரு நல்ல சூழ்நிலையை செயல்படுத்தி இருக்கின்றோம்.

    இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக, 3 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும் கோவில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும்.

    திருச்செந்தூர் உள்பட அனைத்து கோவில்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை முழுமையாக தடுக்கின்ற முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் எங்களது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். கோர்ட்டுக்கு செல்வதாக அந்த கோவிலின் வக்கீல்கள் தெரிவித்துள்ளதால் அங்கு நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லலாம் என்று காத்திருக்கிறோம்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் அங்கு என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ அவைகளையெல்லாம் சேகரித்துக் கொண்டு வருகிறோம். உரிய நேரத்தில் நிச்சயமாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இயக்குநர் (தலைமையிடம்) ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் காரியத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
    • பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும் அந்தந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அதேபோன்று கடற்கரையை தூய்மைபடுத்துகின்ற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் களத்திற்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டு மென்று முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தொடர்ந்து இன்றைய தினத்தோடு 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மீதமுள்ள 15 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் காரியத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலே பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம் இப்படி பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் குறிப்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார்.

    அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், மோகன், நா.எழிலன், உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, கலெக்டர் அமிர்தஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

    • சட்டமன்ற மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 36 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • அம்பத்தூர் பஸ்நிலையம் கலைஞர் 1967-ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    வடசென்னையில் உள்ள பஸ்நிலையங்களை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.

    அம்பத்தூர் பஸ் நிலையத்தை ஆய்வு செய்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 36 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் அம்பத்தூர் எஸ்டேட் பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், கவியரசு கண்ணதாசன் நகர் உள்பட 6 பேருந்து நிலையங்கள் ரூ.50 கோடி செலவில் நவீனமுறையில் மேம்படுத்தப்படும்.

    ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் அழகிய முகப்பு, பெண்கள் பாலூட்டும் அறை இருக்கைகள், டி.வி., கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, நிர்வாக அலுவலகம், கடைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதத்துக்குள் தொடங்கும். அம்பத்தூர் பஸ்நிலையம் கலைஞர் 1967-ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    பூந்தமல்லி:

    தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சூரிய பிரபை, தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரமோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. கோவில் அருகே அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். பஜார் தெரு, பெரிய தெரு, துலுக்க தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக தேர் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஆங்காங்கே கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை பொதுமக்கள் வழங்கினர். தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோவிலில் கடைசியாக தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு, கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    • பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி, திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    சென்னை:

    சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி, திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இவ்வாண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு கோவில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும்.

    கோவில்களில் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு கட்டணமில்லா திருமணமும், புத்தாடையும் அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாண்டு முதல் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், அத்திருமணத்திற்கு 4 கிராம் பொன் தாலி கோவில் சார்பில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது.
    • தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டது.

    சென்னை:

    சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் 1976-ம் ஆண்டும், இரண்டாம் பெருந்திட்டம் 2008-ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது.

    இத்திட்டம் 2026-ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. மூன்றாவது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரில் 29 மண்டலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக பெருவாரியான பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விதமாக, சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை பெருநகரின் மூன்றாம் பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இணைய வழி வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வலியுறுத்தினார்.

    இந்த தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு கருத்து தெரிவிக்க விரும்புவோர், ஆங்கில படிவத்தினை பூர்த்தி செய்ய: https://forms.gle/1SaapSDXXyyAmbBK7 அல்லது தமிழ் படிவத்தினை பூர்த்தி செய்ய: https://forms.gle/4cQVYKFekpia4upr9 அல்லது www.cmavision.in என்ற இணையதள பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்கலாம்.

    • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டார்.
    • தண்ணீர் தொட்டி தெருவில் அமைந்துள்ள பழைய மலேரியா மருத்துவமனையை கள ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (8.4.2023) சென்னை பெருநகர வளர்ச்சி குழும இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள பழைய நாடக கொட்டகையை ஆய்வு செய்தார்.

    சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் தொட்டி தெருவில் அமைந்துள்ள பழைய மலேரியா மருத்துவமனையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய டயாலிசிஸ் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத்தினையும் மற்றும் தண்ணீர் தொட்டி தெருவில் அமைந்துள்ள பழைய மலேரியா மருத்துவமனையும் கள ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம். சிவகுருபிரபாகரன், சி.எம்.டி.ஏ தலைமை திட்ட அலுவலர் எஸ்.ருத்ரமூர்த்தி, ராயபுரம் மண்டல அலுவலர் ஜி.தமிழ்செல்வன், செயற்பொறியாளர் லாரன்ஸ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர முடியுமா? என திருப்பரங்குன்றம் உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
    • சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 12 ஆண்டுகள் ஆகம விதிப்படி குடமுழுக்கு செய்யப்படாத அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி 668 கோவில்களுக்கு இந்தாண்டு திருப்பணி மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருப்பணி ரூ.17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்' என்றார்.

    மேலும், முதற்படை வீடான திருமுருகன் கோவிலில் அமைந்துள்ள குன்றில் உள்ள காசி விஸ்வநாத கோவிலுக்கு பக்தர்கள் மிக உணர்வோடு படிக்கல் ஏறி ஆண்டவனை வணங்கி கொண்டிருக்கிறார்கள்.

    அந்த குன்றின் மேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர முடியுமா? என திருப்பரங்குன்றம் உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

    காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் குறித்து சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருவதாகவும், சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    • தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம்.
    • கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி மூவரசம்பட்டு குளத்தில் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக 5 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

    மரணம் அடைந்த 5 பேருக்கும் சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

    தீர்த்தவாரி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தளி ராமச்சந்திரன் கூறினார்.

    இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம்.

    * கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.

    * கடந்த ஆண்டு அனுமதியின்றி குடமுழுக்கு செய்ய முயன்றனர்.

    * கோவிலை 5 பேர் வகித்து வருகின்றனர்.

    * சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர் என்னை அழைத்து கண்டித்தார்.

    * இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022-23-ம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5,061 பணிகளும் மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
    • பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் 2024-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்தும், 2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிலுவையிலுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு 2021-22-ம் ஆண்டில் 112 அறிவிப்புகளின் மூலம் 3,769 பணிகளும், 2022-23-ம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5,061 பணிகளும் மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    இந்த அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை தவிர்த்து, தற்போது நடைபெற்று வரும் இதர பணிகளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், 2023- 2024-ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் நமது பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் காலப்பெட்டகங்களாக திகழும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை பாதுகாத்திடும் வகையில் அவற்றை புனரமைக்கும் பணிகளுக்கும், கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×