search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam water level"

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக உயர்ந்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 782 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 172 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 650 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

    டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் தொடர்ந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.2 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரவரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

    நேற்று அணைக்கு 6 ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 99.08 அடியில் இருந்து 99.42 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீரமட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதி 4 ஆயிரத்து 72 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 158 கன அடியாக இருந்தது. இன்று 6 ஆயிரத்து 8 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 98.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை மேலும் உயர்ந்து 98.74 அடியா க உயர்ந்தது. பிற்பகல் 99 அடியை எட்டியது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. #MetturDam
    மேட்டுர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 31-ந் தேதி 3 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரத்து 130 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 5 ஆயிரத்து 548 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 850 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 97.84 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 98.09 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 97 அடியாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 31-ந்தேதி 3012 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 4,072 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 4,130 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று காலை 13ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை 5ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 98.04 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 97.84 அடியாக சரிந்தது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு 17ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்துவருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 30-ந் தேதி 2ஆயிரத்து 538கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,012 கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 4,072 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு 17ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    அதன்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடியும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 98.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 98.04 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    7 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி 100 அடியை எட்டியது.

    அதே மாதம் 23-ந்தேதி அணையின் உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

    பின்னர் பானசத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மழை சற்று குறைந்ததாலும் கடந்த 5-ந்தேதி நீர்மட்டம் 101.79 அடியாக சரிந்தது.

    இதற்கிடையே மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணைக்கு 24 ஆயிரத்து 764 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர ஆரம்பித்தது.

    நேற்று 104.89 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.37 அடியாக சரிந்தது. நேற்று 9 ஆயிரத்து 35 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 ஆயிரத்து 783 கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணையில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    இருந்தாலும் 100 நாளை தாண்டியும் மேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டு 100 அடிக்கு மேல் நீடிக்கிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு 178 நாட்கள் 100 அடிக்கு மேல் நீர்மட்டம் நீடித்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீர்மட்டம் 100 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று மாலை முதல் 5 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.61 அடியாக உயர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்தது.

    டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 101.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.02 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    கடந்த 14-ந் தேதி 115 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து இன்று 105.62 அடியாக இருந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 6 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 5 ஆயிரத்து 462 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.

    கடந்த 14-ந் தேதி 115 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து இன்று 105.62 அடியாக இருந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MetturDam

    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 7 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 24 ஆயிரத்து 712 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரத்து 901 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 215 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 17 ஆயிரத்து 825 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கடந்த 22-ந் தேதி மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பிய நிலையில் நேற்று வரை அணையின் முழு கொள்ளளவான 120 அடிக்கும் மேல் நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து குறைந்ததால் இன்று நீர்மட்டம் 119.82 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு 34 ஆயிரத்து 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டுகிறது.

    தொடர் மழையால் அங்குள்ள கபினி கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக உயர்ந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணையின் நீர்மட்டம் 117 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு 37 ஆயிரத்து 783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 2 அல்லது 3 நாட்களில் கிருஷ்ணராஜசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும்.

    தற்போது அணையில் இருந்து 3 ஆயிரத்து 768 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஹாரங்கி அணையில் இருந்து 12 ஆயிரத்து 338 கன அடி தண்ணீரும் ஹேமாவதி அணையில் இருந்து 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு செல்கிறது. இதனால் கிருஷ்ண ராஜசாகர் அணை வேகமாக நிரம்புகிறது. ஓரிரு நாளில் இந்த அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    கபினி அணைக்கு நேற்று 47 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    கபினி அணையில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 8-ந்தேதி தமிழக - கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்தடைந்தது.

    நேற்று இரவு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்ட படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் ஐவர்பாணி என்றழைக்கப்படும் ஐந்தருவி பகுதியில் பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது. பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இறங்கி விடாத வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை 34 ஆயிரத்து 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 71.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று பிற்பகல் 72 அடியை தொட்டது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    தற்போது கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 47 ஆயிரம் கன அடி தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும். இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை நீரில் மூழ்கி வருகிறது. காவிரி கரையோரத்தில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களது உடமைகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு மேடான பகுதிக்கு சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதிகளில் நீரோடை போல் காணப்பட்ட காவிரி ஆறு தற்போது பரந்துவிரிந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #MetturDam
    ×