search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 548 கன அடியாக அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. #MetturDam
    மேட்டுர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 31-ந் தேதி 3 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரத்து 130 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 5 ஆயிரத்து 548 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 850 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 97.84 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 98.09 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×