என் மலர்
செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. #MetturDam
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரவரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
நேற்று அணைக்கு 6 ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 99.08 அடியில் இருந்து 99.42 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீரமட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. #MetturDam
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரவரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
நேற்று அணைக்கு 6 ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 99.08 அடியில் இருந்து 99.42 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீரமட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. #MetturDam
Next Story