என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு
Byமாலை மலர்6 Oct 2018 4:07 AM GMT (Updated: 6 Oct 2018 4:07 AM GMT)
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. #MetturDam
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்தது.
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
நேற்று 101.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.02 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்தது.
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
நேற்று 101.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.02 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X