search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "membership"

    • கோவில்பட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது
    • 36 வார்டு பகுதிகளிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி பள்ளிக்கூட தெரு, பங்களா தெரு, வேலாயுதபுரம், பாரதிநகர் உள்ளிட்ட 36 வார்டு பகுதிகளிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

    இதில், கோவில்பட்டி நகர தி.மு.க., செயலாளரும், நகராட்சி சேர்மனுமான கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்தார். இதில், தி.மு.க., அவைத்தலைவர் முனியசாமி, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், வார்டு செயலாளர்கள் சங்கரபாண்டியன், ராமசாமி, சசிகுமார், வார்டு கவுன்சிலர்கள் லவராஜா, ஜாஸ்மின் லூர்து மேரி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார்.
    • 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் பனை மரத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமில் கலந்து கொண்டவர்களை தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் முருகபிரசன்னா வரவேற்று பேசினார்.

    எர்ணாவூர் நாராயணன்

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பனை மரத் தொழி லாளர் கள் நலவாரிய உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார். மேலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டே பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மாரிச்செல்வநாதன்(19), சாம்ராஜ்(18) ஆகிய 2 மாணவர்களை பாராட்டி கவுரவப்படுத்தினார்.

    முகாமில், தொழிலாளர் துறை ஆய்வாளர் ஆறுமுகம், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் கண்ணன், மாநில துணை பொது செயலாளர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாநில தொழிலாளர் சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், சதீஷ், பாலாஜி, அந்தோணி ராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ், பனைமர வாரிய உறுப்பினர்கள் பசுமை வளவன், ஆன்டோ பிரைட்டன், ஆசிரியர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    தூத்துக்குடி

    பின்னர் நேற்று மாலை எர்ணாவூர் நாராயணன் தூத்துக் குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பனைமரத் தொழிலாளர் வாரியத்தில 10 ஆயிரத்து 548 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வாரியம் செயல்படாமல் இருந்தது. பல தொழிலாளர்கள் வாரியத்தில் இணையாமல் உள்ளனர். அவர்களை வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் 500 பேரும், திருச்செந்தூரில் 1000 பேரும் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர். 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மீன்பிடி தடைக் காலங் களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது போன்று பனை தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பனங்காட்டில் குடிசை அமைத்து தங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் அமைப் பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அவர் தூத்துக்குடி பனை பொருள் கூட்டுறவு அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார்.

    • 4 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவுவின்படி இன்று தேர்தல் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியற்கு உட்படுத்த துவரிமான் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவளவு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்ல மரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது.

    கொரோனா மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் நுண்பார்வையாளர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் சுமதி இறந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இது பொது பெண்கள் வார்டாகும். இங்கு 4 பெண்கள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் மொத்தம் 452 வாக்குகள் உள்ளன. இதில் 253பேர் பெண் வாக்காளர்கள், 199 பேர் ஆண் வாக்காளர்கள்.

    இந்த வாடுக்கான தேர்தல் செல்லம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    மதுைர மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்தில் காலியாக உள்ள உறுப்பினர் தேர்தல் இன்று நடந்தது. முத்துலிங்காபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. 146 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வுடன் வார்டு மக்கள் திரளா னோர் வாக்களித்தனர்.

    திருப்பங்குன்றம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட துவரிமான் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் துவரிமான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்றது.

    இங்கு உறுப்பினர் பதவிக்கு தெய்வம், பால்பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் மொத்தம் 510 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 255 பேர் பெண் வாக்காளர்கள். இதே எண்ணிக்கையில் ஆண் வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு காமிராவில் பதிவு செய்யப்பட்டது.

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவளவு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மகேஸ்வரி, சுந்தரி ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 494. இந்த தேர்தலை முன்னிட்டு மேலவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலை கொட்டாம்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு 7 பேர் இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அழைப்பாளர்களாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முரளிதரன், சீனிவாசமூர்த்தி ஆகியவர்களோடு சேர்ந்துகொண்டு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தும், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையிலும், இன்றைய கூட்டத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள். நீக்கப்பட்டவர்களின் பெயர் வருமாறு:-

    முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப், பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர்.

    இவர்களோடு கட்சிக்காரர்கள் கட்சி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Thirunavukkarasar
    ×