search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palm tree workers"

    • பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார்.
    • 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் பனை மரத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமில் கலந்து கொண்டவர்களை தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் முருகபிரசன்னா வரவேற்று பேசினார்.

    எர்ணாவூர் நாராயணன்

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பனை மரத் தொழி லாளர் கள் நலவாரிய உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கினார். மேலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டே பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மாரிச்செல்வநாதன்(19), சாம்ராஜ்(18) ஆகிய 2 மாணவர்களை பாராட்டி கவுரவப்படுத்தினார்.

    முகாமில், தொழிலாளர் துறை ஆய்வாளர் ஆறுமுகம், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் கண்ணன், மாநில துணை பொது செயலாளர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாநில தொழிலாளர் சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், சதீஷ், பாலாஜி, அந்தோணி ராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ், பனைமர வாரிய உறுப்பினர்கள் பசுமை வளவன், ஆன்டோ பிரைட்டன், ஆசிரியர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    தூத்துக்குடி

    பின்னர் நேற்று மாலை எர்ணாவூர் நாராயணன் தூத்துக் குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பனைமரத் தொழிலாளர் வாரியத்தில 10 ஆயிரத்து 548 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வாரியம் செயல்படாமல் இருந்தது. பல தொழிலாளர்கள் வாரியத்தில் இணையாமல் உள்ளனர். அவர்களை வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் 500 பேரும், திருச்செந்தூரில் 1000 பேரும் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர். 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மீன்பிடி தடைக் காலங் களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது போன்று பனை தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பனங்காட்டில் குடிசை அமைத்து தங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் அமைப் பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அவர் தூத்துக்குடி பனை பொருள் கூட்டுறவு அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார்.

    உடன்குடி வட்டார பகுதியில் பனை மரத்தில் புதிய முறையில் ஏறி தொழிலாளர்கள் பதனீர் எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது அந்த பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
    உடன்குடி:

    துத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்புக்கட்டி என்றாலே அதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வரும் உடன்குடி கருப்புக்கட்டி உற்பத்தி தற்போது உடன்குடி வட்டார பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள பனை மரத்தில் வளரும் பாளைகளை தொழிலாளர்கள் பக்குவப்படுத்தி கலசம் கட்டி காலையில் பதனீர் இறக்கி, கருப்பு கட்டி காய்ச்சுகின்றனர். மாலையில் பனை ஏறி பாளையை சீவி விடுகின்றனர்.

    தினசரி காலை, மாலை என இருமுறை பனை மரத்தில் ஏறி இறங்க வேண்டும். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த தொழில் விறுவிறுப்பாக நடக்கும். பனை மரத்தில் ஏறி இறங்குவதற்கு முன்பு இரு கால்களையும் சேர்த்து நார் போட்டு ஏறுவார்கள். நெஞ்சில் தழும்பு ஏற்படாமல் இருக்க நெஞ்சில் தோல் மாட்டுவார்கள். இந்த முறையில் தினசரி இருமுறை ஏறி இறங்குவதற்கு ஆட்கள் கிடைக்காததால் பனை ஏறும் முறையை தற்போது மாற்றியுள்ளனர்.

    பனை மரத்தில் கீழிருந்து உச்சி வரை தடுப்புகள் வைத்து கயிற்றினால் கட்டுகிறார்கள். இது ஒரு ஏணியை போல அமைந்து விடுகிறது. இதில் மளமளவென ஏறி பதனீர் எடுக்கின்றனர். இப்படி ஏறுவதால் நெஞ்சில் காயம், தழும்புகள் ஏற்படாது.

    இவ்வாறாக பனை ஏறி வரும் தொழிலாளி பெரியபுரத்தை சேர்ந்த முருகராஜ் கூறுகையில், “பனைத்தொழில் ஆண்டுக்கு ஆண்டு அழிவதற்கு முதல் காரணம் பனை ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் புதிய முறையில் பனை ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையில் பனை ஏறுவதற்கு பலர் தயாராக உள்ளனர்” என்றார்.

    உடன்குடி பகுதியில் தற்போது எந்த கலப்படமும் இல்லாமல் பனை மரத்து பதனீரை வைத்து கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்புக்கட்டி ஆகியவற்றை சிலர் மட்டுமே தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×