search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimuthar dam"

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 138.95 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,228.95 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 25-ந்தேதி நாள் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தரைப்பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. மாநகர பகுதியிலும் ஏராளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை நின்றாலும் பல்வேறு இடங்களில் வெள்ளம் வடியவில்லை.

    அதனை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதியில் குறிப்பாக டவுன் காட்சி மண்டபம் முதல் மவுண்ட் ரோடு, ஆர்ச் வரை அதிகளவு தண்ணீர் தேங்கி இருந்தது. இன்று அவை முழுவதுமாக வடிந்தது.

    இதற்கிடையே அணை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 11.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 138.95 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,228.95 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2,553.37 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக இன்று 3-வது நாளாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இன்று காலை நிலவரப்படி மருதூர் கால்வாயில் இருந்து 13,070 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 102.20 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 103.50 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பாளை, கன்னடியன் கால்வாய், சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. கடனா அணையில் 8 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    குண்டாறு அணை பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது. அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை ஆய்க்குடி, தென்காசி பகுதியில் லேசான மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 82.7 அடி நீர் இருப்பு உள்ளது. ராமநதியில் 82 அடியும், கருப்பாநதியில் 68.24 அடியும் நீர் இருப்பு உள்ளது. குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PapanasamDam #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழையால் அணைகள், குளங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி பகுதிகளில் மிதமான மழையும், செங்கோட்டை, சிவகிரி, ஆய்க்குடி பகுதியில் லேசான மழையும் பெய்தது.

    மலை பகுதிகளில் பெய்த மழையினால் நேற்று குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் மழை நின்றதால் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 119.95 அடியாக இருந்தது. இன்று 120.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1423 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.67 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 567 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 480 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் கடனா அணையின் நீர்மட்டம் 79.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.33 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32.5 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 29.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.74 அடியாகவும், அடவிநயினார் அணை 74 அடியாகவும் உள்ளன.

    பாபநாசம் கீழ் அணை மூலமாக மொத்தம் 1216 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-58, சேர்வலாறு-39, மணிமுத்தாறு-24.8, கடனா-18, அம்பை-5.4, சேரன்மகாதேவி-5.8, தென்காசி-5, பாளை-4, நெல்லை-3.3., ஆய்க்குடி-3, செங்கோட்டை-2, சிவகிரி-2, குண்டாறு-1. #PapanasamDam #ManimutharDam


    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நகர்ப்புறங்களில் சற்று குறைவான மழையே பெய்துள்ளது. ராதாபுரத்தில் 14 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,511 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 318 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழையின் போது மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 80 அடியாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மீண்டும் 100 அடியை தாண்டியுள்ளது.

    இதுபோல கடனாநதி- 75.80, ராமநதி- 69, கருப்பாநதி- 69.23, குண்டாறு- 36.10, வடக்கு பச்சையாறு- 31, நம்பியாறு- 21.62, கொடுமுடியாறு- 42, அடவிநயினார்- 98.50 அடிகளாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    குற்றாலத்தில் நேற்று காலை அதிகளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று பிற்பகல் தண்ணீர் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-61
    சேர்வலாறு-47
    ராமநதி-15
    ராதாபுரம்-14
    கடனாநதி-10
    சேரன்மகாதேவி-9
    ஆய்க்குடி-4
    அம்பை-2
    சங்கரன்கோவில்-2
    நெல்லை- 1.2
    மணிமுத்தாறு- 1.2
    செங்கோட்டை- 1 #ManimutharDam
    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 99.10 அடியாக உயர்ந்தது. #NellaiRain #ManimutharDam
    நெல்லை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் சில பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌து.

    இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 128.38 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 130.97 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வருகிறது. கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.80 அடியாக இருந்தது. இன்று இது 74.20 அடியாக அதிகரித்துள்ளது.

    ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளன. அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.50 அடியாக இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 28.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:‍-

    கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, களக்காடு-5.4, ராமநதி-5, தென்காசி-4.3, கடனா நதி-2, அடவிநயினார் அணை-2.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 4 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2.5 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2.4 மில்லிமீட்டரும், கடம்பூர், வைப்பரில் தலா 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. #NellaiRain #ManimutharDam
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக மணிமுத்தாறு அணை வருகிற 7-ந்தேதி முதல் 145 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami #ManiMutharDam
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்ட வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு 7.11.2018 முதல் 31.3.2019 வரை 145 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து 399.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #ManiMutharDam
    ×