search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lottery ticket"

    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

    உடுமலை

    உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பஸ் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 37) என தெரியவந்தது. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

    • லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடமிருந்து 70 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மவுலியா பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா (வயது 45) இவர் இன்று காலை திருநாவலூர் அருகே மடப்பட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் வந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சேக் அப்துல்லாவை கையும் கலவுமாக பிடித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு அப்துல்லாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 70 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், பண்ருட்டி டிஎஸ்பிசபியுல்லா உத்தரவுபடி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), மற்றும் போலீசா ர்ப ண்ருட்டிபகுதியில்தீவிர ரோந்துபணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பண்ருட்டி கந்தன் பாளையம், காமாட்சிஅம்மன் கோவில் தெருபெருமாள்-55 என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி டிக்கெட் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார்பண்ருட்டி பகுதியில்தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு நின்றுகொண்டிருந்த பண்ருட்டி கொக்கு பாளையம்ரோட்டைசேர்ந்த அப்துல்மத்தீன்(வயது45),புதுப்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த யுவராஜ் (48), ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவர்களிடம்இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி டிக்கெட் விற்றபவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழகரும்பிரான்கோட்டை சேர்ந்த சிவசாமி மகன் கருணாநிதி (வயது 51) என்பவர் வம்பன் குளக்கரையில் லாட்டரி டிக்கெட் விற்றதை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று எண் உள்ள நோட்டு ஐந்து மற்றும் ரூபாய் 18,990 பறிமுதல் செய்தனர். 

    • மதகடிப்பட்டு சந்தை தோப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தை தோப்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு சந்தை தோப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தை தோப்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது.

    இந்த சந்தையில் மாடுகள் மட்டுமின்றி விவசாயி விலை பொருட்கள், காய்கறி, பழ வகைகள் மற்றும் கருவாடு வகைகள் விற்பனை செய்யப்படுகிறன்றன. இதனை வாங்குவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள்.

    இதற்கிடையே அங்கு வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வருபவர்களை வாடிக்கையாளர்களாக்கி 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருபுவனை குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது ஒருவர் லாட்டரி சீட்டு முடிவுகளை செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கலிதீர்த்தாள்குப்பம் சுகுமார் நகரை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(வயது50) என்பதும், இவர் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை பணம் ரூ.7 ஆயிரத்து 700 மற்றும் செல்போன், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சிதம்பரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் அண்ணாமலை நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட மருத்துவக் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அக்கிரகாரப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 43) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்துகுமார்(வயது 55) என்பவரை பிடித்து கைது செய்தனர்.

    கரூர்

    கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்துகுமார்(வயது 55) என்பவரை பிடித்து கைது செய்தனர்.

    மற்றொருவர் ராஜா(40) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் தில்லை காளி அம்மன் கோவில் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்த சின்னதுரை (56) என்பவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரம் அருகே காரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடமிருந்து லேப்டாப் செல்போன் கார் மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளுக்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக புகையிலை பொருள்கள் கடத்தல் மது கடத்தல் லாட்டரி சீட்டு விற்பனை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் இவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூதேவி பகுதியின் சாலை ஓரமாக காரில் ஆன்லைன் மூலம் லாட்டரி 1,2-ம் நம்பர் சீட்டு விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது.

    தங்களின் பேரில் திண்டிவனம் போலீஸ் ஏ .எஸ்.பி அபிஷே கூப்பிட மேற்பார்வையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு காரில் மூதேவி செந்தமிழ் நகரை சேர்ந்த ரஹ்மத்துல்லா (வயது 22) சென்னை அண்ணாநகர் பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (19) இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து லேப்டாப் செல்போன் கார் மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளுக்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
    • லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் சாலை இந்திரா நகரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு கச்சேரிவலசைச் சோ்ந்த கோகுல் (வயது 21) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

    • விழுப்புரம் புறநகர் பகுதியில் லாட்டரி டிக்கெட் அமோகமாக விற்பனை செய்யப்பட்டது.
    • போலீசார் சிறுவந்தாடு அருகே மந்தக் கடை பகுதிகளில் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவிற்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெ க்டர் அன்பழகன் தலை மையிலான போலீசார் சிறுவந்தாடு அருகே  மந்தக்கடை பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மந்தகடை பகுதியில்உள்ள பாரதி தாசன் என்பவரது டீக்கடையில்அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் மறைத்து வைத்துவிற்பனை செய்வது தெரிய வந்தது. வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து புறநகர் பகுதியில் லாட்டரி விற்பனைநடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×