search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
    X

    சிதம்பரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    • சிதம்பரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் அண்ணாமலை நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட மருத்துவக் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அக்கிரகாரப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 43) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×