search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி டிக்கெட் விற்றபவர் கைது
    X

    லாட்டரி டிக்கெட் விற்றபவர் கைது

    • லாட்டரி டிக்கெட் விற்றபவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழகரும்பிரான்கோட்டை சேர்ந்த சிவசாமி மகன் கருணாநிதி (வயது 51) என்பவர் வம்பன் குளக்கரையில் லாட்டரி டிக்கெட் விற்றதை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று எண் உள்ள நோட்டு ஐந்து மற்றும் ரூபாய் 18,990 பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×