என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lorry accident"
- பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு, சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜா (வயது24). இவர் நேற்று நள்ளிரவு கொளத்தூர் 200 அடி சாலை செந்தில் நகர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகள்கள் கனிஷ்கா(வயது 11), சஷ்விகா(7). இவர்கள் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்களை தினமும் அவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். அது போல் இன்று காலை 2பேரையும் அவரது தாத்தா மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பல்லகவுண்டம்பாளையம் சாலையில் செல்லும் போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பள்ளி குழந்தைகள் கனிஷ்கா, சஷ்விகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான குழந்தைகள் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
- விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.
இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த சோழிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி அமுதா (வயது36). கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சோழவரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா கணவர் கண்முன்பே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து கணவர் முருகன் கதறி துடித்தார். அவரும் மோட்டார் சைக்கிளோடு விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
- படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
- காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பரிமளா (வயது 40), மகன் அருண்ராஜ் (19). பழனிவேல் குடும்பத்துடன் காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் இருந்த அருண்ராஜ், பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மது சாந்தன் (வயது 14). இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இதேபோல், சுக்கம்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் நவீன் (14) பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.
இந்த நிலையில் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு மாணவர் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி திரும்பினர்.
அப்போது அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தான். நவீன் பலத்த காயம் அடைந்தான்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீராணம் போலீசார் மற்றும் பொது மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன் நவீனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் நவீன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் திவ்யா (வயது25). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் போரூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் திவ்யா வீட்டிற்கு செல்வதற்காக அண்ணாநகர் வந்தார். பின்னர் அங்கிருந்து அவரை தாய் மகேஸ்வரி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
இரவு 10 மணியளவில் மாதவரம் 100 அடி சாலை -வாட்டர் கேனல் சாலை சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய மகேஸ்வரியும், அவரது மகள் திவ்யாவும் கீழே விழுந்தனர்.
லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாய் மகேஸ்வரி சிறிது தூரம் தள்ளி விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அவர் தனது கண்முன் மகள் பலியானதை கண்டு அலறி துடித்தார்.
இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான கொளத்தூர் எம்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
- அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 சரக்கு லாரிகளில் காற்றாலைக்கான இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சாலையோர பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக கவிழ்ந்தது.
அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.
+3
- கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகத் தான் சென்று வருகின்றன.
- தமிழகம்-கர்நாடகா இடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு மிகக்குறைந்த தொலைவில் செல்ல முடியும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகத் தான் சென்று வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக பர்கூர் மலைப்பாதை வழியாக வரும் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது.
சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் அவ்வப்போது கவிழ்வதும். வண்டி பழுதாகி நிற்பதும் அடிக்கடி நிகழ்வதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு ஏற்படும் அதே நிலை தற்போது பர்கூர்மலை பாதையிலும் நிகழ்ந்து வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து கிரானைட் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியிலிருந்து ராட்ச கிரானைட் கல் சாலையின் ஓரமாக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து லாரி டிரைவர் சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அனைத்தும் வளைவுகளில் மிகுந்த சிரமத்திற்கு இடையே ஆபத்தான நிலையில் வாகனத்தை ஓட்டி வந்தனர்.
அந்த வளைவில் கனரக வாகனங்கள் முன் சக்கரத்தில் பெரிய கற்களையும் பின் சக்கரத்தில் பெரிய கற்களையும் வைத்து மிகவும் சிரமப்பட்டு திருப்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே இடத்தில் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து சேலத்துக்கு மரம் ஏற்றி வந்த லாரி ராட்சத கிராணைட் கல் விழுந்த அதே இடத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் வரட்டு பள்ளம் அணைப்பகுதியிலிருந்து மலை பாதைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதே போல் பர்கூர் சோதனை சாவடியிலிருந்து அந்தியூர் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் நேற்று அதிகாலை விழுந்த கிரானைட் கல் 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கி அதிகாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் விடிய, விடிய தவித்தனர்.
- இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார்.
- ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார்.
மாமல்லபுரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது27). அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சிமெண்ட் தொட்டிகள், சிலாப்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார்.
இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார். கல்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய லாரியின் மேல்பகுதியில் படுத்து இருந்த இளஞ்சூரியன் தவறி நடுரோட்டில் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார்.
பின்னர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய இளஞ்சூரியனை அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே இளஞ்சூரியன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
- விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லாரி ஒன்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, லபாயெட் சதுக்க பகுதியில் உள்ள சாலை மற்றும் நடைபாதையை அதிகாரிகள் மூடினர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெம்லி கூறினார்.
பாதுகாப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனை அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெல்மி கூறியுள்ளார்.
மேலும், விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றியும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் இந்திய வம்சாவளியான மிசோரி, செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல், மோட்டார் வாகனத்தை பொறுப்பற்ற முறையில் இயக்குதல், ஜனாதிபதி, துணைத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் மீது கொலை மிரட்டல் அல்லது கடத்தல் அல்லது தீங்கு விளைவித்தல், கூட்டாட்சி சொத்துகளை அழித்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவாடானை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் மீன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பதப்படுத்தப்பட்ட இறால், கனவாய் உள்ளிட்ட ஏராளமான மீன்கள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
லாரியை அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டினார். அவருடன் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் மாரிமுத்து (வயது 51) உடன் சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேசுவரம் சாலையில் சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.
கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையை விட்டு இறங்கிய லாரி 30 அடி தூரத்தில் உள்ள குப்புசாமி என்பவர் வீட்டின் மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் ஜெயபிரகாஷ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதிய வேகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.
இந்த விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்