search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாலைகள்"

    • சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது.
    • இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, வடமலைபாளையம் ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றாலைகளில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போவதும் நடந்து வந்தது. இது குறித்து காற்றாலை உரிமையாளர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டம்பட்டி மற்றும் வடமலைபாளையம் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முருகேசன் என்பரது மகன் வேல்குமார் (வயது 28 ), அதே பகுதியை சேர்ந்த பிச்சை நாடார் என்பவரது மகன் மாரியப்பன் (38), வெள்ளைச்சாமி என்பவரது மகன் பெருமாள் (32), தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் விஜி (28), புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரது மகன் ஜீவானந்தன் (23) என்பதும் தெரிய வந்தது. இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
    • அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 சரக்கு லாரிகளில் காற்றாலைக்கான இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

    பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சாலையோர பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக கவிழ்ந்தது.

    அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்ததால் காற்றாலை இறக்கைகளில் சேதம் ஏற்பட்டது.

    • நாடு முழுவதும் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு.
    • இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது .

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலையை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை மந்திரி பகவந்த் கூபா இன்று பார்வையிட்டார். 


    அந்த நிறுவன அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் உள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சார விநியோகிக்க முடியும். 

    எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×