search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wind turbines"

    • சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது.
    • இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, வடமலைபாளையம் ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றாலைகளில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போவதும் நடந்து வந்தது. இது குறித்து காற்றாலை உரிமையாளர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டம்பட்டி மற்றும் வடமலைபாளையம் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முருகேசன் என்பரது மகன் வேல்குமார் (வயது 28 ), அதே பகுதியை சேர்ந்த பிச்சை நாடார் என்பவரது மகன் மாரியப்பன் (38), வெள்ளைச்சாமி என்பவரது மகன் பெருமாள் (32), தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் விஜி (28), புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரது மகன் ஜீவானந்தன் (23) என்பதும் தெரிய வந்தது. இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.
    • நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உ ற்பத்தி கணக்கிட ப்படுவது வழக்கம்.

    கோவை,

    கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என காற்றாலை மின் உற்பத்தியா ளர்கள் தெரிவித்து ள்ளனர்.அதிகரித்துவரும் மின்தேவை யை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

    தமிழ்நாட்டில் சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் மற்றும் காற்றாலை துறையில் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

    ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக மின் உற்பத்தி சிறப்பாக உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:

    காற்றாலை சீசன் குறிப்பிட்ட ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தாலும் நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உ ற்பத்தி கணக்கிட ப்படுவது வழக்கம்.

    கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன.2022-23ம் நிதியா ண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் கடந்த நிதியாண்டு போல 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மத்திய, மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு.
    • இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது .

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலையை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை மந்திரி பகவந்த் கூபா இன்று பார்வையிட்டார். 


    அந்த நிறுவன அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் உள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சார விநியோகிக்க முடியும். 

    எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.
    • காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது.

    கோவை:

    தமிழகத்தில் காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15-ந் தேதி காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியுள்ளது.

    காற்று சீசன் தொடங்கியுள்ள காரணத்தா ல் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்ப டும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்து ள்ளது.ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்ப ட்டுள்ளது.இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

    காற்று சீசன் தமிழகத்தில் தொட ங்கியுள்ள காரணத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் இன்று வரை ஒரே நாளில் அதிக மின்சாரம் 4-ந் தேதி உற்பத்தி செய்யப்பட்டது.

    ஜூலை 3-ந் தேதி ஒரே நாளில் 10.4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தின் தினசரி மின் தேவையில் காற்றாலைகள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்க தொடங்கியுள்ளன.

    ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×