search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி- மத்திய மந்திரி தகவல்
    X

    பகவந்த் கூபா, காற்றாலைகள்

    ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி- மத்திய மந்திரி தகவல்

    • நாடு முழுவதும் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு.
    • இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது .

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலையை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை மந்திரி பகவந்த் கூபா இன்று பார்வையிட்டார்.


    அந்த நிறுவன அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் உள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சார விநியோகிக்க முடியும்.

    எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×