search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens death"

    • லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகள்கள் கனிஷ்கா(வயது 11), சஷ்விகா(7). இவர்கள் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இவர்களை தினமும் அவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். அது போல் இன்று காலை 2பேரையும் அவரது தாத்தா மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பல்லகவுண்டம்பாளையம் சாலையில் செல்லும் போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பள்ளி குழந்தைகள் கனிஷ்கா, சஷ்விகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான குழந்தைகள் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கார் கதவு மூடிக்கொண்டதில் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள பெருங்குடியை அடுத்த மஜரா லெப்பை குடியிருப்பு பாலர் பள்ளி தெருவை சேர்ந்தவர் நாகராஜன்.

    இவரது மகள் நிதிஷா(வயது 7), மகன் நிதிஷ்(5) ஆகியோர் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

    அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சுதன் என்பவரின் மகன் கபிசாந்த்(4) என்பவரும் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கார் கதவு மூடிக்கொண்டதில் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராதாபுரத்தில் நடந்த இந்த துயரசம்பவம் குறித்து விபரம் அறிந்து மிகவும் துயருற்றேன்.

    உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டு உள்ளேன் என கூறி உள்ளார்.

    டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் என சுதர்சனம் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
    மாதவரம்:

    கொளத்தூர் தணிக்காசலம் நகரை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தீக்ஷா, தக்ஷின் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

    அவர்களின் உடல்களுக்கு மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாதவரம் தொகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் மேடு, பிரகாசம் நகர், தணிகாசலம் நகர், மாதவரம் பால்பண்ணை, பகுதிகளில் குடியிருப்பு இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.

    குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி காய்ச்சல் பரவுகிறது. இது பற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மெத்தனமாக உள்ளனர். குழந்தைகள் பலியானதற்கு அதிகாரிகளே காரணம்.

    இதனால் தற்போது 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டனர்.

    சுகாதாரப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, முனுசாமி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். #DenguFever
    ×