என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Radapuram"
- கார் கதவு மூடிக்கொண்டதில் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள பெருங்குடியை அடுத்த மஜரா லெப்பை குடியிருப்பு பாலர் பள்ளி தெருவை சேர்ந்தவர் நாகராஜன்.
இவரது மகள் நிதிஷா(வயது 7), மகன் நிதிஷ்(5) ஆகியோர் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சுதன் என்பவரின் மகன் கபிசாந்த்(4) என்பவரும் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கார் கதவு மூடிக்கொண்டதில் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராதாபுரத்தில் நடந்த இந்த துயரசம்பவம் குறித்து விபரம் அறிந்து மிகவும் துயருற்றேன்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டு உள்ளேன் என கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்