என் மலர்
இந்தியா

உ.பி. அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: 10 குழந்தைகள் பரிதாப பலி
- உ.பி. அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 10 குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியாகியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி பலியாகியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர், ஏராளமான வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடிவருகின்றனர்.
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி, சுகாதாரத் துறை செயலர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
Next Story






