search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambakkam Bus Stand"

    • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது.
    • கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    * மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் செல்லும்.

    * மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 40 ரூபாயும், ரெட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    * அம்பத்தூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 30 ரூபாயும், மதுரவாயலில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 25 ரூபாயும், பெருங்களத்தூரில் இருந்து 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

    சென்னை:

    வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், இப்போது மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 20 சதவீத பஸ்களை இன்று துவக்கி வைத்துள்ளோம்.

    வடசென்னை பகுதியை சேர்ந்த மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்து மாதவரத்தில் இருந்து இந்த பஸ்களை இயக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    மாதவரத்தில் இருந்து திருச்சிக்கு 18 நடைகள், சேலத்துக்கு 17 நடைகள், விருதாச்சலத்துக்கு 6 நடைகள், கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரம் 16, கும்பகோணம் 14, சிதம்பரம் 5, நெய்வேலி 11, புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5 நடைகளும், திண்டிவனத்துக்கு 10 நடைகள், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக 22 நடைகள், போளூர், வந்தவாசிக்கு 20 நடைகளும் என 160 நடைகள் இயக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே இங்கிருந்து திருப்பதிக்கு 90 நடைகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் மாற வேண்டும் என்ற சூழல் இல்லாமல், இங்கிருந்தே மக்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வாய்ப்பாக அமையும்.

    குறிப்பாக திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஒருநிலை இருந்ததை மாற்றி மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்படும். மாதவரம் பைபாஸ் வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படும்.

    2 ஆயிரம் நடைகள் கிளாம்பாக்கத்தை தொட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 1400 நடைகள் இயக்கப்படுகிறது.

    கிளாம்பாக்கத்தில் இருந்து இப்போதைக்கு கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேட்டுக்கு எப்படி இணைப்பு இருந்ததோ அதேபோல கிளாம்பாக்கம் சென்று பஸ் பிடிப்பதற்கு எல்லா பகுதியில் இருந்தும் பஸ் இயக்கப்படுகிறது.

    கேள்வி:- பொதுமக்கள் வீட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வது பெரிய சவாலாக உள்ளது என்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு கிளாம்பாக்கம் எங்கிருக்கு என்பதே தெரியாது என்கிறார்களே?

    பதில்:- ஏற்கனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பஸ் நிலையத்தை மாற்றிய போதும் இதுபோன்ற சிரமம் இருந்தது. மக்களுக்கு புரிதல் வரும் வரை அந்த சிரமம் இருந்தது. அதேபோல்தான் இப்போது கிளாம்பாக்கம் பஸ் முனையத்துக்கு செல்லும்போது சிரமம் இருக்கலாம்.

    இந்த பேருந்து முனையத்தை அ.தி.மு.க. ஆட்சியில்தான் திட்டமிட்டார்கள். ஆனாலும் நாங்கள் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை கைவிடவில்லை.

    ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிற காரணத்தால் அதில் செயல்படுத்தபடாமல் இருந்த 70 சதவீத பணிகளை செயல்படுத்தி முழு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

    ஒரு விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் புதிய பேருந்து முனையம் அமைந்துள்ளது. ஏற்கனவே தாம்பரம் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் கோயம்பேடுக்கு வந்து பஸ் ஏற எவ்வளவு தூரம் இருந்ததோ அதே தூரம் தான் கிளாம்பாக்கம் செல்வதற்கும் ஆகிறது.

    திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

    வடசென்னை பகுதியில் இருப்பவர்களுக்கு இப்போது அந்த பிரச்சனை வராமல் இருப்பதற்காகத் தான் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    எனவே சிரமம் இல்லாமல் அவர்கள் செல்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
    • 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்ட லூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப்பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    பின்னர் கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இதன் தொடர்ச்சியாக நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பஸ்களின் புறப்பாடுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    மேலும், 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

    மாதவரத்தில் இருந்து சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி ஆகிய வட மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து 80 சதவீத பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 சதவீத பஸ்களும் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. கிளாம்பாக்கம் புதிய முனையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும்.

    கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து இ.சி.ஆர். வழியாக செல்லும் பஸ்களும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் இயக்கப்படும் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும்.

    மேற்கண்ட பஸ் இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பஸ்கள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். மேற்கண்ட தகவலின்படி மக்கள் பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.

    அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.

    • பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வந்தது.

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன.

    அனைத்து ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆம்னி பஸ்களை 24-ந்தேதி முதல் இயக்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700-800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும்.

    ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அமைச்சர் சிவசங்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தியதில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை எதிர்நோக்கும் வகையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன்.

    இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் தெரியவரும்.

    தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்து வரும் நிலையில் அனைத்து பிரச்சனைக்கும் முதலமைச்சர் நேரில் பேசுவது என்பது சிரமம் ஆகும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளனர்.

    ஏற்கனவே தற்போது உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. போராட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையான ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையானது ஒரு துறைக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கையாக இல்லாமல் பல்வேறு துறை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உள்ளதால் அரசின் நிதி சுமை எவ்வளவு கூடுதலாகும் என்பதை கணக்கிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக முடிவெடுத்தால் மற்ற துறை சார்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பாகும் என்ற காரணத்தினால் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில், ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு தற்போது வேலையில் இருந்து வருகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருவதால் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 4 கோரிக்கைகளில் தற்போது 2 கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் நிதித்துறை சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அரசியல் காரணத்தினால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. ஆனால் அகவிலைப்படி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தற்போது நிதி நிலை சரியான பிறகு அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கலைஞர் உரிமை திட்டம் தொகை வழங்கப்படும் என்பது தொடர்பாக கூறியபடி நிதி நிலைமையை சரி செய்து தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து பொதுமக்கள் அரசு பஸ்களில் அதிகளவில் பயணம் செய்து வந்தனர்.

    இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தமிழக அரசு திட்டமிட்டதை விட அதிக அளவில் பயணிகள் சென்று வந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கண்டக்டர்கள், டிரைவர்கள் பயணிகளை பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு அழைத்துச் சென்று வந்தனர். சென்னை நோக்கி வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் காரணத்தினால் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இன்னும் 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகம் பஸ்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் கிளாம்பக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.

    மேலும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த ஊரிலிருந்து திரும்பி செல்பவர்கள் சென்னை கோயம்பேடு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பஸ்கள் இயக்கப்படுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தொ.மு.ச. பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், பகுதி துணை செயலாளர் வக்கீல் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரெயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் புதிதாக அமைய உள்ள ரெயில் நிலையம் இடையே உயர்மட்ட நடைபாதை அமைக்க நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    5,900 ச.மீ நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நடைபாதை 400மீ நீளத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.

    சென்னை :

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    * கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மக்களுக்கு தேவையானதை செய்ய இருக்கிறோம். அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்படும்.

    * கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.

    * பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக செய்து தரப்படும்.

    * ஜன. 24-ந்தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    * கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
    • நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    சென்னை:

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர்.
    • சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம்:

    பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப் படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.

    • விரைவு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
    • நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி தொழிற்சங்கங்கள் நோட்டீசு வழங்கி இருந்தது.

    இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையை முதலில் நிறைவேற்றி தருமாறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதனால் வருகிற 9-ந்தேதியில் இருந்து பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' என்ற அறிவிப்பு பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம்.

    ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர். இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசி விட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

    கேள்வி:- தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இனிமேல் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சமரசத்துக்கு வருவார்களா?

    பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிற்சங்கம் வரமாட்டார்கள். தொ.மு.ச. சேர்ந்த தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசிப் பார்ப்போம்.

    கேள்வி: எந்த சமரசத்துக்கும் தொழிற்சங்கத்தின் வராவிட்டால் பஸ் ஸ்டிரைக் தொடங்கி விடுமே? இதனால் பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுமே? ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளார்களே?

    பதில்: விரைவு பஸ்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். தொழிற்சங்கத்தினர் அதை ஒன்றும் செய்ய இயலாது. முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும்.

    ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் மட்டும் தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. அதையும் நாம் சமாளிக்க முடியும். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும்.

    நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.

    கேள்வி: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 8 வருடமாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. அதை மட்டும் முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறார்களே?

    பதில்: 8 வருடம் நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த முழு சுமையையும் இப்போதைய நிதி நெருக்கடியில் தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.

    போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும்.

    இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

    இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள். கடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம்.

    சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான்.

    எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம்.

    எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம்.

    இப்போதைக்கு பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட இருப்பது உள்பட பல வேலைகள் இருக்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்த பிறகு அதில் உள்ள சிரமங்களை சரி செய்யும் பணிகள் நிறைய உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7, 8-ந்தேதிகளில் வருகிறது. சட்டமன்றம் விரைவில் கூட உள்ளதாக தெரிகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இருப்பதால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    • பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
    • பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.

    கிளாம்பாக்கம்:

    கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் இவ்வழித்தடத்தில் வந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் பேருந்து முனையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

    ×