என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambakkam Railway Station"

    • குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
    • மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு வெளியூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட சுமார் 75 சதவீத பணிகள் முடிந்துஉள்ளன.

    இதேபோல் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் முடிந்து திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பஸ்நிலையத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. பருவமழை பெரியளவில் இல்லையெனில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டபோது சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் முறையாக தீர்க்கப்பட்டுள்ளன.

    ஆரம்ப கட்டத்தில் எந்தக் கட்டுமானத்திலும் சிறிய சிக்கல்கள் இருக்கும். ஆனால் திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் ஆரம்பித்த பஸ் நிலையம் இப்போது திட்டமிட்டு பயணிகள் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    உதாரணமாக, திருச்சி விமான நிலையம் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் விமான சேவை முறையாக இல்லை. ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கடந்த 2023 டிசம்பர் 31 அன்று திறக்கப்பட்ட நாளில் இருந்தே மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.

    கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில் நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காவல் நிலையம் இல்லாத காரணமாக தற்போது அதற்கும் கட்டமைப்புப் பணிகள் முடிவடைவதில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

    மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை. அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகு தென் மாவட்டங்களுக்கு பெரிதும் பயணிகள் சேவையை வழங்கும் வகையில் அதிக பஸ் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்குசென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது. கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் பாதுகாப்பு வசதிகள் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது. ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    எனவே புதிய ரெயில் நிலைய பணிகள் முழுவதும் வருகிற ஜூன் மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் பயணிகளின் போக்குவரத்து பிரச்சனை முழுமையாக தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது இது தீர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த பணியும் விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வரமுடியும். 

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


    இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    கிளாம்பாக்கம்:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரெயில் நிலையம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு உள்ள சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது.

    கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது.

    ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே புதிய ரெயில் நிலைய பணி வருகிற மே மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையப்பணியில் 50 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. வருகிற மே மாதத்திற்குள் முழு பணியையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது என்றார்.

    இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இந்த பணியும் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வர முடியும்.

    ×