என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Keerai Recipes"
- வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
- கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
செய்முறை :
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .
சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!
- இதர கீரைகளைவிட இதில் அதிகளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன.
- முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - ஒரு கப்,
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
நெய், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் -1,
பூண்டு பல் - 4,
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும்.
வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம்.
சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.
- வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
- இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -2-3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.
முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.
- பாலக்கீரையை தினமும் சாப்பிட்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
- இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
பாலக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான சத்தான பாலக்கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!
- தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - 1 கட்டு
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.
கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.
பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கீரை வடை தயார்.
இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.
முட்டை - 2
பசலைக்கீரை - 1 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!
பாலக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரை, வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கிய கீரையை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகமாக வைத்து எடுத்து பரிமாறவும்.
அகத்திக்கீரை - அரை கட்டு,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்ப்பால் - 200 கிராம்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
அரிசி கழுவின நீர் - 200 மில்லி,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
பின்னர் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் - 10,
அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் - 2 கப்,
தேங்காய் பால் - 1 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, ஆய்ந்து, கொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொரிந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கீரையை வதக்கியதும், அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும்.
கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
கீரையும் வெந்த பிறகு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வரும் முன் இறக்கவும்.
சூப்பரான மணத்தக்காளிக்கீரை மண்டி
வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்தூள், பெருங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
பூண்டை நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும். ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.
ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நாட்டு முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - 2
மிளகுதூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைடீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.
பசலைக்கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 1 கப்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
ப.மிளகாய் - 1
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெண், உப்பு - தேவையான அளவு
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.
அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்