search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabaddi"

    • இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் தாலுகா, அணைக்கரை அருகே பட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை யொட்டி மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60 அணிகளை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக ளுக்கு இன்று இரவு பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். விழாவிற்கு மாவட்ட செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், முன்னிலை வகித்தார்.

    இதில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டாஸ்போட்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசுகையில்:-

    முதல்-அமைச்சர் தலைமையில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி இந்தியா விற்கே முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டி ருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதன்படி அரசின் அனைத்து துறைகளிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    பல இடங்களில் கபடி விளையாட்டு போட்டியை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு போட்டியை கடமைக்கு நடத்தாமல் உண்மையிலேயே சிறப்பான ஏற்பாடுகளை செய்து மின்னொளியில் நடத்துவது பாராட்டுக்குரியது. இரவு 11:45 மணிக்கு ஒரு மாநாட்டை போல இங்குள்ள கூட்டம் இருப்பதற்கு காரணம் பார்வையாளர்கள்தான் என்பதை பார்த்து பாராட்டுகிறேன் என்றார்.

    • அரியலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காவலர் அணி முதலிடம் பிடித்தனர்
    • வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு துறை சார்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என 50 போட்டிகள் நடைபெற்றது. தற்போது ஜனவரி, பிப்ரவரி மாதம் மாவட்ட அளவிலான போட்டிகள், மே மாதம் மாநில அளவிலான போட்டிகளும் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, போக்குவரத்து ஆய்வாளர் சாஹிரா பானு தலைமையிலான கபடி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து எரிதல் போட்டியில் போக்குவரத்து காவலர் அஞ்சலி முதல் இடமும், வாலிபாலில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராஜா, சோமசுந்தரிடம் வாழ்த்து பெற்றார்.

    • கந்தர்வகோட்டை அருகே கபடி போட்டி நடைபெற்றது
    • இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டியில் 26 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி வெற்று முதல் இடத்தை பிடித்த சென்னம்பட்டி அணியினருக்கு ரூபாய் 40 ஆயிரத்தை பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் வழங்கினார். இரண்டாம் இடத்தை முதுகுளம் அணியினரும், மூன்றாம் இடத்தை கோமாபுரம் அணியினரும், நான்காம் இடத்தை அரவம்பட்டி அணியினரும் பிடித்தனர். போட்டியில் விளையாடிய அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத் தலைவர் அருண் பிரசாத், சந்திரன், அரவை மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள்.
    • 3-ம் பரிசாக ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.


    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மற்ற பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் (12 வயது முதல் 19 வயது வரை) நாளை ( வெள்ளிக்கிழமை ) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

    ம மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீட்டர் ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.

    கபடி விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 13-ந்தேதி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான தடகள போட்டிகள் (17 முதல் 25 வயது வரை), 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

    பொதுப்பிரிவினருக்கு (15 முதல் 35 வயது வரை), ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், கிரிக்கெட் பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

    அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ், தடகளம் ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1000-ம், வழங்கப்படுகிறது.

    மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்குஅழைத்துச்செல்லப்படுவார்கள்.

    இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சிங்கம்பாறை அருட்தந்தை அருள்நேசமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • முதல் பரிசு, சுழற் கோப்பையையும் நெல்லை ஏ.பி.பி. அணி பெற்றது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய 10-ம் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

    சிங்கம்பாறையில் அமைந்துள்ள டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு திடலில் நடந்த போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சிங்கம்பாறை அருட்தந்தை அருள்நேசமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் மொத்தம் 16 அணிகள் மோதின முதல் பரிசு ரூ. 40 ஆயிரத்தையும், சுழற் கோப்பையையும் நெல்லை ஏ.பி.பி. அணி பெற்றது. 2-வது பரிசை மணிமுத்தாறு காவலர்கள் அணி ரூ.30 ஆயிரம் பெற்றது. 3-வது பரிசை கீழப்பாவூர் அணி ரூ. 20 ஆயிரத்தை பெற்றது. 4-வதாக தூத்துக்குடி துரைசிங்கம் அணி ரூ.15 ஆயித்தையும் பெற்றன.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. எச். மனோஜ்பாண்டியன் கலந்து கொண்டார். இந்த கபடி போட்டியானது 25-ந் தேதி இரவு தொடங்கி 26-ந் தேதி காலை 7 மணி வரை விடிய விடிய மின்னொளியில் நடைபெற்றது.

    இதனை ஏராள மானவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டு கழகமும், இளையோர் நல இயக்கமும் செய்திருந்தனர்.

    • பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது.
    • இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் உடற் கல்வித் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.

    இப்போட்டிக்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கலந்து கொண்ட அணிகளை உடற்கல்வித்துறை இயக்குனர் சிவகுமார் வரவேற்று பேசினார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

    கபடி போட்டிகளை கந்தசாமி கண்டர் அறநிலையத்துறை தலைவர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் கல்லூரி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.எஸ் கல்லூரி 2-ம் பரிசையும், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி 3-ம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி நிர்வாகம் செய்திருந்ததது.

    • மதுரையில் இன்று மாலை 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கபடி போட்டி நடக்கிறது.
    • இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    மதுரை

    மதுரை மாவட்ட பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இறுதி கபடி போட்டி மதுரா கல்லூரியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் 720 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

    இந்த போட்டி இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், சீனிவாசன், கதலி நரசிங்க பெருமாள், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, பா.ஜ.க. திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, துணைத்தலைவர்கள் அக்னி எம்.ராஜேஷ், பாலாஜி தங்கவேல், சிறப்பு விருந்தினர்கள் ரமணன் விஜயன், ஆதம் சிம்சியர், மாநில செயலாளர்கள் என்.ராமச்சந்திரன், டாக்டர் சுரேஷ்குமார், டி.புஷ்பநாதன், எம்.கண்ணன், ஞானமணி, தமிழ்சங்கு,டாக்டர். பப்னா ராஜ்குமார், கார்த்திக், காளிராஜ்,ஹரிகிருஷ்ணன், ரவிக்குமார், ஆயிஷா அப்துல்லா, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் என்.ராமச்சந்திரன் செய்திருந்தார்.

    • திருவாலவாயநல்லூரில் கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • இதில் 85 அணிகள் கலந்து கொண்டன.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் அருண் மற்றும் சாலினி நினைவு கபடி குழு இணைந்து கபடி போட்டியை நடத்தியது. 85 அணிகள் கலந்து கொண்டன. சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசை குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணியும், 2-வது பரிசை காடுபட்டி அணியும், 3-வது பரிசை செல்லூர் அணியும், 4-வது பரிசை பேட்டை கிராம அணியும் பெற்றது. பரிசுகளை ஊராட்சி மன்ற செயலாளர் சகுபர்சாதிக், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேகர், முத்தையா, பாசறை மற்றும் ஜே.பி.கிளப் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார். முன்னதாக போட்டிகளை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சித்தாலங்குடி ஒன்றிய கவுன்சிலர் தனபால் முன்னிலை வகித்தனர்.

    • அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளையை அடுத்து உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர். செய்துள்ளார்.

    போட்டியில் மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா தமிழ்நாடு உள்பட 80 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகிறது.

    போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பார்வையிட்டார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். சுரேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ், புளியடி குமார், எழில் ஜோசப், ஸ்டாலின், முத்தையா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இன்று இரவு நடைபெறும் முதல்நாள் போட்டியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கிவைக்கிறார்.

    • வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.
    • கபாடி போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும், இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 75-வது சுதந்திரதினத்தைச் சிறப்பிக்கும் வகையில், கவிதை, பேச்சு, கட்டுரை, சிலம்பம், நாடகம், இசைக் கருவி இசைத்தல், தனிநபர் பாடல், குழுப்பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், ஓவியம், ரங்கோலி, குழு வியைாட்டு, தடகள விளையாட்டு எனும் போட்டிகள் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

    தமிழ்ப் பல்கலைக்கழகத் துறைகளுக்கு இடையில் நடத்தப்படும் இப்போட்டிகளின் தொடக்க நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் ஆடவர்களுக்கான கபாடிப் போட்டியையும் மகளிர்களுக்கான எறிபந்துப் போட்டியையும் தொடங்கிவைத்தார்.

    போட்டிகளைத் தொடங்கிவைத்து மாணவர்களை வாழ்த்திய துணைவேந்தர், உடல் நலன், மனநலன் எனும் இவற்றை மேம்படுத்தும் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பாகப் போட்டித் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாட வேண்டும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் 15.8.2022 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்தார்.

    முதல்நாள் நடைபெற்ற ஆடவர் கபாடிப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும் இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மகளிர்களுக்கான எறிபந்துப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவியர்கள் முதல் இடத்தையும் இலக்கிய–த்துறை மாணவியர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இந்நிகழ்வில் புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை முரட்டுக்காளை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.

    தென்காசி:

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரம், மாடகண்ணுபட்டி முரட்டுக்காளை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 5-ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி வெள்ளபனையேறி பட்டியில் உள்ள எஸ்.ஆர்.டி. மைதானத்தில் நடைபெற்றது.

    போட்டிகளை எஸ்.ஆர்.டி. களஞ்சியம் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. இறுதிப் போட்டியில் வென்ற குறும்பை ஜூனியர் கே.எம்.சி. அணியினருக்கு அரியப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.டி. தினேஷ்குமார் சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.

    2-ம் இடத்தை பிடித்த அரியப்பபுரம் முரட்டுக்காளை அணியினருக்கு சிவநாடானூர் அரசு ஒப்பந்ததாரர் முருகன் பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை முரட்டுக்காளை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.

    இந்திய கபடி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த அனுப் குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #Kabaddi #AnupKumar
    இந்திய கபடி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் அனுப் குமார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். இவரது தலைமையில் இந்திய கபடி அணி ஆசிய போட்டியில் தங்கம் வென்றுள்ளது. 2014-ம் ஆண்டு தங்கம் வென்ற அணியில் ஒரு வீரராக இடம்பிடித்திருந்தார்.

    கடந்த 15 வருடங்களாக கபடி விளையாடி வந்த அனுப் குமார், நேற்று தனது ஓய்வை அறிவித்தார். 2006-ம் ஆண்டு விளையாட்டிற்கான அர்ஜூனா விருதை வென்றுள்ளார். இவரது தலைமையில் புரோ கபடி லீக்கின் 2-வது சீசனில் மும்பை அணி (U Mumba) கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    ×