search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Raid"

    • கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
    • நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்பு.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பணம் ரொக்கமாக மீட்கப்பட்டது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்றது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     


    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பகுதிகளில் மீட்கப்பட்ட ரொக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த பணம் முழுக்க என் குடும்பத்தார் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு சொந்தமானது என்று நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். வருமான வரித்துறை சார்பில் இது கருப்பு பணமா இல்லை வெள்ளை பணமா என்பதை தெரிவிக்கட்டும்."

    "நான் வியாபார துறையில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் இதற்கு பதில் அளிப்பார்கள். மக்கள் இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இந்த பணத்திற்கும் காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்," என்று தெரிவித்தார். 

    • வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.
    • 50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.

    ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

    ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.

    நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.

    நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யிடம் இருந்து 350 கோடி ரூபாய் பறிமுதல்.
    • மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பணத்தை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய ஊழலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் "மக்களிடம் இருந்து பா.ஜனதா தொடர்ந்து ஆதரவை பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டம் கொள்கைதான் காரணம். அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சிபிஐ, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது" என்றார்.

    • கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
    • நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்பு.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு கடந்த ஆண்டு பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தீரஜ் சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    கடந்த சில நாட்களாக தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு இருக்கிறது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்று வருகிறது.


     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு எழுதிய எக்ஸ் பதிவில், "பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், நாட்டில் இவ்வளவு கருப்பு பணம் மற்றும் ஊழல் இருப்பதை பார்க்கும் போது என் மனம் வருத்தம் கொள்கிறது. இவ்வளவு அதிகளவு கருப்பு பணத்தை எங்கிருந்து தான் குவிக்கின்றனர் என்றே தெரியவில்லை. நாட்டில் இருந்து ஊழலை வெளியேற்ற முடியும் என்றால், அதனை காங்கிரஸ் மட்டுமே செய்ய முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது ஊழல் குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு, ஊழல் மற்றும் கருப்பு பணம் குறித்து எழுதியிருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    • ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம்.
    • ஒரு எம்.பி.-யிடம் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எம்.பி.யானவருமான தீரஜ்குமார் சாகு-வுக்கு தொடர்படைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வரும் சோதனையில், அதிகாரிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் பணத்தை எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதவிர மேலும் பல இடங்களில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     


    இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.-யிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஒரு எம்.பி.-யிடம் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு, ஒரு எம்.பி.-யின் வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகை மீட்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கான தொகை மீட்கப்பட்டு இருக்கிறது, ஆனாலும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் அமைதியாகவே இருக்கிறது."

    "ஊழல் தான் அவர்களின் குணம் என்பதால் காங்கிரஸ் மவுனமாக இருப்பது புரிகிறது. ஆனால் ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தி.மு.க. மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் ஏன் மவுனம் காக்கின்றன. அரசு துறைகள் தவறாக கையாளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் செய்யப்பட்டது ஏன் என்பது நன்றாகவே புரிகிறது. அவர்கள் செய்யும் ஊழல் அம்பலமாகி விடும் என்ற அச்சத்தில் தான் இத்தகைய பிரசாரம் செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். 

    • மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.
    • ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பெரிய நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் பால்தியோ சாகு. இந்த நிறுவனத்துக்கு அதன் வினியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் பெருந்தொகையை செலுத்தியுள்ளதாகவும், அது கணக்கில் காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதையடுத்து குறிப்பிட்ட மதுபான நிறுவனத்தின் ஆலை, அலுவலகம் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    நேற்று 3-வது நாளாக தொடர்ந்த சோதனையில், ஒடிசா சுதபாடா நகரில் உள்ள அந்த மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில், ரூ.200 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.

    அங்கெல்லாம் அலமாரிகளில் செங்கற்களை போல கட்டு கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து வருமான வரி அதிகாரிகளே மலைத்துப் போயினர்.

    அவற்றை பெரிய பெரிய பைகளில் எடுத்து அடுக்க அடுக்க, அந்த பணி நீண்டுகொண்டே போனது.

    சுமார் 160 பைகளில் அடுக்கப்பட்ட ரொக்கத்தொகை ரூ.250 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அவற்றில் பைகளில் இருந்த ரூ.20 கோடி பணம்தான் நேற்று எண்ணி முடிக்கப்பட்டது. மொத்தம் 36 பணம் எண்ணும் எந்திரங்களை நிறுத்தாமல் பயன்படுத்தியும், பணக்கட்டுகளை எண்ணி முடிக்க இயலாமல் வருமான வரி அதிகாரிகள் திணறிப்போயினர்.

    ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான். இந்த சோதனை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பிட்ட மதுபானம் நிறுவனமும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

    அந்த மதுபான நிறுவனத்துடன் ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தள அரசியல்வாதிகளுக்கும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வருமான வரி சோதனை தொடர்பான செய்தியை இணைத்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டு மக்கள், குவிந்து கிடக்கும் இந்த பணத்தை பார்த்துவிட்டு, பின்னர் 'நேர்மை' குறித்து அந்த தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்' என்று கூறியுள்ளார்.

    மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதாவும் வலியுறுத்தியுள்ளது.

    • சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 3-ந்தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனை தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்தது. இந்த சோதனையின் போது எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    எ.வ.வேலுவுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 3 அறைகளை பூட்டி வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் அப்போது ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 80 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு குன்னத்தூர் ஆகிய 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அருணை மருத்துவ கல்லூரியில் கடந்த முறை சோதனை நடத்தியபோது சீல் வைக்கப்பட்ட 3 அறைகளிலும் சீலை அகற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அறையில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இன்று காலை 11 மணி அளவில் 6 வருமானவரி துறை அதிகாரிகள் தனித்தனியாக 3 கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் அருணை கல்லூரியில் மீண்டும் சோதனை நடத்தியதுடன் சீல் வைக்கப்பட்ட அறையிலும் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சோதனை நடைபெற்ற 3 அறைகள் முன்பும் மத்திய படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    செங்கல்பட்டு குன்னத்தூரில் ராஜ பிரகாஷ் என்கிற ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் ஒருவர் குன்னத்தூர் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாகவே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் மீண்டும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
    • வரி ஏய்ப்பு அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டவுன் பகுதியில் வாசவி என்ற பெயரில் தங்க, வெள்ளி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பிரபு காந்த் (45). இவர் நகைக்கடையுடன் நண்பர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கோவையில் இருந்து 3 கார்களில் வருமான வரித்துறையினர் வந்தனர். சத்தியமங்கலம் டவுன் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு திடீரென சென்று ஷட்டரை மூடி சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் வெள்ளி கடை மற்றும் உரிமையாளர் வீடு, அவரது நண்பர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடையில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் வெளியே உள்ளவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடையின் ஒவ்வொரு பகுதியாக சென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை தொடர்ந்து சோதனை நடந்தது.

    பின்னர் வருமானவரித்துறையினர் சோதனை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முழுமையான தகவல் தெரிவிக்கவில்லை. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனை சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களிலும் நீலகண்டன் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
    • நுங்கம்பாக்கம், வேப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் நீலகண்டன். இவர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கே.கே. நகரில் உள்ள அவரது வீடு மற்றும் ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தி.நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்களான பிரகாஷ், தினேஷ், நாகேஸ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், வேப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களிலும் நீலகண்டன் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    ஜவுளி நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்கிற புகாரின்பேரிலும், தொழில் அதிபர்கள் மீதான புகாரின் பேரிலும் சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அதிகாரிகளுடன் சேர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனையின்போது ஜவுளி நிறுவனம் சார்பில் முறையாக வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை முடிவில் தான் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் தெரிய வரும்.

    கே.கே. நகர் 9-வது செக்டார் 59-வது தெருவில் நீலகண்டன் வசித்து வருகிறார். "வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ்" என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.

    இந்த வீட்டில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. மற்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

    • 2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது.

    கோவை:

    அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3-ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வரும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் வீட்டிலும், கோவை சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதபோல் சிங்காநல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம், கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமாரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    இதில் 2 இடங்களில் சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது. மற்ற இடங்களில் 4 நாட்களை கடந்தும் சோதனை நடந்தது. நேற்று மீனா ஜெயக்குமார் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    இன்று 6-வது நாளாக கோவையில் சோதனை நடைபெற்று வருகிறது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும், சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்தில் இந்த சோதனையானது நடக்கிறது.

    2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே அங்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து மேலும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது. இந்த 4 இடங்களில் இருந்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    • நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன்.
    • எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்பட இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது டிரைவரிடம் 5 நாட்களாக கேள்வி என்ற பெயரில் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை உருவாக்கி விட்டார்கள். கண்ணீர் வரவைக்கும் வகையில் கேள்விகளால் துளைத்து விட்டார்கள். நான் தனியாக வசித்து வருகிறேன். எனது மனைவி தனியே வசிக்கிறார். எனது மகன்கள் இருவரும் தனித்தனியே வசிக்கிறார்கள். அனைவருமே வருமான வரியை சரியாக கட்டி வருகிறோம். ஆனால் அனைவரிடமுமே வருமான வரித்துறையினர் கேள்விகளால் துளைத்தெடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இறுதியாக நான் தங்கியிருந்த கல்லூரிக்கே வந்து, சல்லடை போட்டு ஆய்வும் நடத்தினார்கள். என்னை தொடர்புபடுத்தி விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் பல இடங்களில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். எல்லோருமே பயந்துபோயிருக்கிறார்கள்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு கோபம் இல்லை. அம்புதான் இவர்கள். அம்பு விட்டவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்.

    இந்த 4 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை தொடர்பான வெளியாகி உள்ள கற்பனை கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன். நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன். நான் அடிப்படையில் விவசாய வீட்டு பிள்ளையை சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    சென்னை வந்து படத்தொழிலில் ஈடுபட்டேன். பல திரைப்படங்களுக்கு வினியோகஸ்தராக இருந்தேன். பட தயாரிப்பாளராகவும் ஆனேன். இப்படி நான் ஈட்டிய பணத்தின் மூலம்தான் என்னுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் என்ற பெயரில் அறக்கட்டளையை 1991-ம் ஆண்டு தொடங்கினேன்.

    இந்த அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை நாங்கள் உருவாக்கினோம். இந்த பகுதியில் நாங்கள் தொடங்கிய கல்லூரிகளால் பல என்ஜினீயர்கள் உருவாகி உள்ளனர். தொழிற்புரட்சி ஏற்பட்டது.

    நான் பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவன்.

    என் வீட்டிலோ, என் மனைவி வீட்டிலோ அல்லது எனது 2 மகன்கள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட பறிமுதல் செய்திருந்தால் கூட அதற்கு பொறுப்பேற்று பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்குள்ள சொத்து என்றால் 48 ஏக்கர் 33 செண்டு நிலம் இருக்கிறது. காந்திநகரில் உள்ள எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஒரு மருத்துவமனைக்காக 33 ஆண்டுகள் லீசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில் ஒரு வீடு உள்ளது. இது மட்டும் தான் எனக்கான சொத்து. இதைத்தான் தேர்தல் பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

    அமைச்சர் பதவிக்கு வந்தபிறகு ஒரு செண்டு நிலம் கூட நான் சொத்தாக சேர்த்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு எனது வரவு செலவு கணக்கை சரியாக தாக்கல் செய்து வருகிறேன். வருமான வரித்துறையை ஏமாற்றுபவன் அல்ல நான்.

    என்னிடம் மக்கள் மனு அளிக்க வருவது தவறா? என்னுடன் தொடர்புபடுத்தி அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது நியாயமா?

    பா.ஜ.க.வில் தொழில் அதிபர்களே இல்லையா... அங்கெல்லாம் வருமான வரித்துறை போகிறதா? தி.மு.க. மீது மட்டும் வருமான வரித்துறையினர் ரெய்டுக்கு வருவது ஏன்? இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்களோ, தி.மு.க.வோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ பயப்பட போவது கிடையாது. ரெய்டு மூலமாக எங்களை அடக்கிவிட முடியாது. இந்த ரெய்டால் 5 நாட்கள் எனது அரசுப்பணி முடங்கி இருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவையே பார்த்தவர். அவரது அரவணைப்பில் இருப்பவர்கள் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. அந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை வென்று காட்டுவதே குறிக்கோள். அந்த குறிக்கோளை முன்வைத்தே நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் எ.வ.வேலுவின் மூத்த மகன் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்
    • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    திருச்சி:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு வீடு, அலுவலகங்கள், அவர் தொடர்புடையவர்கள் அலுவலகங்கள் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அவருடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நிதி நிறுவன அதிபரான சாமிநாதன் காப்பி தூள் ஏஜென்சியாகவும் உள்ளார். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்து சென்றனர் சென்றனர்.

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    ஏற்கனவே கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் திருச்சியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×