search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL 2019"

    இதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு குறித்த தகவலை பார்ப்போம். #IPL2019 #CSK
    இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த சிறப்பை இந்த சீசனிலும் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்திருக்கிறது.

    இந்த சீசனில் உள்ளூரில் தோல்வி காணாத (சென்னையில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி) ஒரே அணியும் சென்னை தான். #IPL2019 #CSK 
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்து விடும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    சென்னை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் டோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டோனி இதுவரை 314 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். ‘டாப்-3’ பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன் (147 ரன்), அம்பத்தி ராயுடு (192 ரன்), சுரேஷ் ரெய்னா (207 ரன்) ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.



    பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் (16 விக்கெட்), தீபக் சாஹர் (13 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹர்பஜன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (517 ரன்கள்), பேர்ஸ்டோ (445 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணியில் இடம் பிடித்து இருக்கும் இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் முன்பு ஐதராபாத் அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் சற்று பிரச்சினைக்குரியதாக உள்ளது. கடந்த 2 லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணி முறையே சென்னை, கொல்கத்தா அணிகளை எளிதில் வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும். பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முழு முனைப்பு காட்டும். இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் தோல்வியை சந்திக்காமல் 4 வெற்றியை தொடர்ச்சியாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஐதராபாத் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சென்னை, ஐதராபாத் அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 8 முறையும், ஐதராபாத் அணி 3 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர் அல்லது ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், ஷபாஸ் நதீம், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா.  #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
    ஐபிஎல் போட்டியின் 40-வது ‘லீக்‘ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். #IPL2019 #RR #DC
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியின் 40-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி மும்பை இந்தியன்சை 2 முறை (4 விக்கெட், 5 விக்கெட்), பெங்களூர் அணியை 1 தடவை (7 விக்கெட்) தோற்கடித்து இருந்தது. பஞ்சாப் (14 ரன், 12 ரன்), சென்னை (8 ரன், 4 விக்கெட்), அணிகளிடம் தலா 2 முறையும் ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தலா 1 தடவையும் தோற்றது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ராஜஸ்தான் அணிக்கு உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே மாற்றப்பட்டு ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    பேட்டிங்கில் பட்லர் (311 ரன்), சுமித் (245 ரன்), சாம்சன் (234) ஆகியோரும், பந்து வீச்சில் ஆர்ச்சர் (11 விக்கெட்), ஷிரேயாஸ் கோபால் (10 விக்கெட்)ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

    அந்த அணி கொல்கத்தாவை 2 முறையும் (சூப்பர் ஓவர், 7 விக்கெட்), மும்பை (37 ரன்), பெங்களூரு (4 விக்கெட்), ஐதராபாத் (39 ரன்), பஞ்சாப் (5 விக்கெட்) ஆகியவற்றை ஒருமுறையும் வீழ்த்தியது.

    சென்னை ( 6 விக்கெட்), பஞ்சாப் (14 ரன்), ஐதராபாத் (5 விக்கெட்), மும்பை (40 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.

    ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை டெல்லி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணியில் தவான் (347 ரன்), கேப்டன் ஹிரேயாஸ் அய்யர் (327 ரன்), ரி‌ஷப்பந்த் (258 ரன்), ரபடா (21 விக்கெட்), கிறிஸ் மோரிஸ் (11 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #IPL2019 #RR #DC
    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி. #IPL2019 #DCvKXIP
    ஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் கெயில் 69 ரன்னும், மன்தீப் சிங் 30 ரன்னும் எடுத்தனர். 
     
    டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

    இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 164  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியொர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ரன்னில் அவுட்டானார்.  அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர்.

    தவான் அரை சதமடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னில் வெளியேறினார். ஐங்கிராம் 19 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். #IPL2019 #DCvKXIP
    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #MIVSRR
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    அதன்படி மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்கும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ், டி காக்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார். டிக் காக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன் அடித்திருந்தபோது எதிர்பாராதவிதமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா, டி காக்குடன் இணைந்து ஆடினார். அதிரடியாக ஆடி வந்த டி காக் 65 ரன் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 6 பவுண்டரியும், 2 சிக்சரும் அடித்தார். அதன் பின் வந்த பொல்லார்ட் 10 ரன்னில் வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 161 ரன்களை எடுத்தது. 

    பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக சாம்சன் 35 ரன்னும், ரீயான் பராக் 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் 59 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

    மும்பை பந்து வீச்சாளர்கள் தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர். #IPL2019 #MIVSRR
    கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது.

    மொயீன் அலி ஒத்துழைப்புடன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். கடைசியில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள ஐந்தாவது சதம் இதுவாகும்.

    இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.

    ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்லுக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா 150 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #IPL2019 #AmitMishra
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா மும்பைக்கு எதிராக 2 விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் 150-வது விக்கெட்டை தொட்டார். அமித் மிஸ்ரா 140 ஆட்டங்களில் விளையாடி 150 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். சராசரி 24.18 ஆகும். 17 ரன் கொடுத்து 5 விக்கெட கைப்பற்றியது அவரது சிறப்பு பந்துவீச்சு ஆகும்.

    ஐபிஎல் போட்டியில் 150-வது விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் ஆவார். இலங்கை வேகப்பந்து வீரர் மலிங்கா முதலில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 115 இன்னிங்சில் 162 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 36 வயதான மிஸ்ரா டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசஸ் ஐதராபாத் அணிகளிலும் விளையாடி இருந்தார். 3 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தி உள்ளார்.



    அவருக்கு அடுத்தப்படியாக பியூஸ் சாவ்லா 146 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார். பிராவோ 143 விக்கெட்டும். ஹர்பஜன் சிங் 141 விக்கெட்டும் எடுத்து முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடாத எம்எஸ் டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK #MSDhoni
    ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன் எம்எஸ் டோனி விளையாடமாட்டார். ரெய்னாதான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், முகுது வலி காரணமாக டோனி பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. டோனி இல்லாத இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.



    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் டோனி பங்கேற்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘டோனி சிறப்பாக இருப்பதாக உணர்கிறார். அவரது முதுகு வலி சரியாகிவிட்டது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் விளையாடுவார்’’ என்றார்.
    சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை ராஜஸ்தான் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KXIPvsRR
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியின் 32-வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் (14 ரன்), மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தோற்று இருந்தது.

    ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (335 ரன்), கிறிஸ் கெய்ல் (322 ரன்), அகர்வால் (199 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

    பந்துவீச்சில் முகமது ‌ஷமி (10 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (9 விக்கெட்), சாம் குர்ராண் (7 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி மும்பை (4 விக்கெட்), பெங்களூர் (7 விக்கெட்) ஆகியவற்றை மட்டுமே வீழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்சிடம் 2 முறையும் (8 ரன், 4 விக்கெட்) தோற்றது. இதேபோல ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடமும் தோற்று இருந்தது.

    சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் 14 ரன்னில் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் ராஜஸ்தான் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் பட்லர் (268 ரன்), ஸ்டீவ் சுமித் (186 ரன்), கேப்டன் ரகானே (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷிரேயாஸ் கோபால் (8 விக்கெட்), ஆர்ச்சர் (7 விக்கெட்), பென் ஸ்டோக்ஸ் (6 விக்கெட்) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் ஜெய்ப்பூரில் மோதிய ஆட்டத்தில் ‘மன்கட்’ அவுட் ஆனது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்லரை அஸ்வின் செய்த இந்த ரன் அவுட் விவகாரம் இன்றைய ஆட்டத்தில் எதிரொலிக்கும். இதற்கு தங்களது அபாரமான ஆட்டம் மூலம் ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #KXIPvsRR
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்து 5-வது வெற்றியை தனதாக்கியது. #IPL2019 #MIvRCB
    மும்பை:

    8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை அணியில் காயம் அடைந்த அல்ஜாரி ஜோசப்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

    ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், கேப்டன் விராட்கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய விராட்கோலி (8 ரன்) 3-வது ஓவரில் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.



    அடுத்து டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பார்த்தீவ் பட்டேல் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. அடித்து ஆடிய பார்த்தீவ் பட்டேல் (28 ரன்கள், 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 49 ரன்னாக இருந்தது.



    இதனை அடுத்து மொயீன் அலி, டிவில்லியர்சுடன் இணைந்தார். இருவரும் பந்தை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டியடித்து வேகமாக ரன் சேர்த்தனர். 13.2 ஓவர்களில் பெங்களூரு அணி 100 ரன்களை கடந்தது. டிவில்லியர்ஸ் 41 பந்துகளிலும், மொயீன் அலி 31 பந்துகளிலும் அரைசதத்தை கடந்து அசத்தினார்கள். அரைசதத்தை எட்டிய அடுத்த ஓவரிலேயே மொயீன் அலி (50 ரன்கள், 32 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) மலிங்கா பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 17.1 ஓவர்களில் 144 ரன்னாக இருந்தது. அடுத்து களம் கண்ட மார்கஸ் ஸ்டோனிஸ் (0) அதே ஓவரில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

    அடுத்து அக்‌ஷ்தீப் நாத் களம் இறங்கினார். கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் (75 ரன்கள், 51 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), பொல்லார்ட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதே ஓவரில் அக்‌ஷ்தீப் நாத் (2 ரன்), பவான் நெகி (0) ஆகியோர் மலிங்கா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார்கள். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டும், பெரேன்டோர்ப், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 28 ரன்னும் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), குயின்டான் டி காக் 40 ரன்னும் (26 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), இஷான் கிஷன் 21 ரன்னும் (9 பந்துகளில் 3 சிக்சருடன்), சூர்யகுமார் யாதவ் 29 ரன்னும் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா 11 ரன்னும் (21 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்னும், பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை அணி வீரர் மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 8-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 7-வது தோல்வியாகும். இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.


     #IPL2019 #MIvRCB
    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினர். #IPL2019
    ஐ.பி.எல். போட்டியில் நேற்று தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் 4 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 156 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது. ஐதராபாத் அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 15 ரன்னில் சுருண்டதால் பாதிப்பு ஏற்பட்டது. #IPL2019
    கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பான பந்து வீச்சுக்கு கேப்டன் டோனியின் அறிவுரையே காரணம் என இம்ராம் தாகீர் தெரிவித்துள்ளார். #KKRvsCSK #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்சின் அதிரடி நீடிக்கிறது. அந்த அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தியது.

    ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.

    தொடக்க வீரர் கிறிஸ் லின் 51 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 6 சிக்சர்களும் அடங்கும். அவரது அதிரடியை பின்கள வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இம்ரான்தாகீர் 27 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், சாட்னர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 162 ரன் இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரெய்னா 42 பந்தில் 58 ரன்னும், (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 17 பந்தில் 31 ரன்னும் (5பவுண்டரி), எடுத்தனர். சுனில் நரேன், பியூஸ்சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    சென்னை அணி பெற்ற 7-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற இம்ரான்தாகீர் கூறியதாவது:-

    கேப்டன் டோனியின் அறிவுரைப்படிதான் நான் பந்து வீசினேன். அவரது ஆலோசனை எப்போதுமே பலனை அளிக்கும். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பாராட்டு எல்லாம் அவரைதான் சாரும்.

    எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்குவார். கேப்டனின் அறிவுரையை நான் அப்படியே பின் பற்றினேன்.

    நான் பணியை நேசித்து செய்கிறேன். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை உருவாக்கி வருகிறோம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒருவர் மீது மற்றவர் மதிப்பதே காரணம். எனது விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்களை கேப்டன் அனுமதிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்த தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் கழற்பந்து வீரரான இம்ரான் தாகீர் 40 வயதிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நேற்று 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவர் 13 விக்கெட்டை தொட்டு 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

    மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ரபடா (டெல்லிகேப்டல்ஸ்), 17 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 17-ந்தேதி சந்திக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக சென்னையிடம் வீழ்ந்தது. ஒட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் பெங்களூரை வருகிற 19-ந்தேதி எதிர்கொள்கிறது. #KKRvsCSK
    ×