search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolkatta knight riders"

    கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது.

    மொயீன் அலி ஒத்துழைப்புடன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். கடைசியில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள ஐந்தாவது சதம் இதுவாகும்.

    இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.

    ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்லுக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். #IPL2019 #ViratKohli
    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா, தாஹிரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. #IPL2019 #CSKvKKR
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

    சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.



    சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    டு பிளசிஸ் 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். #IPL2019 #CSKvKKR
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா - டெல்லி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. #IPL2019 #DCvKKR
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் 4 மாற்றமாக இஷாந்த் ஷர்மா, கீமோ பால், ராகுல் திவேதியா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் பட்டேல், சந்தீப் லாமிச்சன்னே, ஹனுமா விஹாரி இடம் பிடித்தனர். கொல்கத்தா அணியில் காயத்தால் அவதிப்படும் சுனில் நரினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிகில் நாய்க் சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி டெல்லியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நிகில் நாய்க் (7 ரன்), கிறிஸ் லின் (20 ரன்), உத்தப்பா (11 ரன்), நிதிஷ் ராணா (1 ரன்), சுப்மான் கில் (4 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினர். இதனால் கொல்கத்தா அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (9.1 ஓவர்) இழந்து தத்தளித்தது.

    இந்த நெருக்கடியான கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல்லும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஸ்செல் வழக்கம் போல் பேட்டை ராக்கெட் வேகத்தில் சுழட்டினார். லாமிச்சன்னேவின் சுழற்பந்துவீச்சில் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ஆனால் 21 ரன்னில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய ‘புல்டாஸ்’ பந்து ஒன்று அவரது இடது தோள்பட்டையை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை தொடர்ந்து துவம்சம் செய்தார். இன்னொரு பக்கம் கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புணர்வுடன் ஆடினார்.


    ரஸ்செலின் அதிரடியால் கொல்கத்தா அணி வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்தது. ரஸ்செல் 62 ரன்களும் (28 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த பியூஸ் சாவ்லா 12 ரன்களும், குல்தீப் யாதவ் 10 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

    பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அமர்க்களப்படுத்தினார். ஷிகர் தவான் (16 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (43 ரன்), ரிஷாப் பான்ட் (11 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினாலும் பிரித்வி ஷா உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரித்வி ஷா 99 ரன்களில் (55 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.-ல் ஒரு வீரர் 99 ரன்னில் அவுட் ஆவது இது 2-வது நிகழ்வாகும்.

    கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசினார். முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த டெல்லி அணி ஹனுமா விஹாரியின் (2 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, அதை எதிர்கொண்ட இங்ராம் பந்தை அடித்து விட்டு வேகமாக ஓடினார். 2-வது ரன்னுக்கு திரும்பிய போது இங்ராம் (10 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்தது.



    இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு ரபடா அபாரமாக பந்து வீசினார்.

    3-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த கொல்கத்தாவுக்கு இது முதலாவது தோல்வியாகும். #IPL2019 #DCvKKR
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் அணி. #IPL2018 #KKRvSRH
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து, சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    கொல்கத்தா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஷிவம் மாவி, சுனில் நரேன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 175 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 40 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ரானா 22 ரன்னிலும், ராபின் உத்தப்பா 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

    ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், சித்தார்த் கவுல், பிராத்வைட் ஆகியோர் 2 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவை வீழ்த்திய ஐதராபாத் அணி, ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. #IPL2018 #KKRvSRH
    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 173 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.

    டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமியும் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.

    கோஸ்வாமி 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அப்போது அணியின் எண்ணிக்கை 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

    கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஜவோன் சியர்லஸ், ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 173 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இந்நிலையில், இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை துல்லியமான பந்துவீச்சால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை அணி. #IPL2018 #KKRvMI
    ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.



    இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர்.

    மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் சிறந்த பீல்டிங்கில் கொல்கத்தா அணி சிக்கியது. இதனால் அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் மட்டுமே 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சரியாக ஆடவில்லை

    இதனால் கொல்கத்தா அணி 18.1 ஓவரில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது.

    மும்பை அணி சார்பில் குருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெக்லெகன், பும்ரா,  மயங்க் மார்கண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #KKRvMI
    கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி. #IPL2018 #KKRvMI
    ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.



    விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.

    இதனால் மும்பை அண் இ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, கொல்கத்தா அணி  211 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
    #IPL2018 #KKRvMI
    ×