search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். 2019 - நேற்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள்
    X

    ஐ.பி.எல். 2019 - நேற்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள்

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினர். #IPL2019
    ஐ.பி.எல். போட்டியில் நேற்று தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் 4 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 156 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது. ஐதராபாத் அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 15 ரன்னில் சுருண்டதால் பாதிப்பு ஏற்பட்டது. #IPL2019
    Next Story
    ×