search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvAUS"

    • இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, தோல்விக்குப்பின் வழக்கமான நடைமுறையின்படி பேட்டியளித்தார். மற்ற வீரர்கள் பேட்டியளிக்கவில்லை.

    ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்காத வீரர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். முகமது சமி தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசம் திரும்பியுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா சென்றடைந்த அவரிடம், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த முகமது சமி, "நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காததுதான் காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்தியிருப்போம்" என்றார்.

    மேலும், அவருடைய சொந்த கிராமத்தில் மைதானம் கட்ட உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு "எனது கிராமத்தில் மைதானம் கட்ட நடவடிக்கை எடுத்த உ.பி. அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாம் திறமையான ஏராளமான இளைஞர்கள் பெற்றுள்ளோம். நம்முடைய பகுதியில் சிறந்த மைதானம், அகாடமி உருவாவது, முக்கியமானது. இளைஞர்கள் விளையாட்டை பற்றி அதிக அளவில் கற்றுக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசிய முகமது சமி, 24 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களம் இறங்க உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணியில் சேர்க்கப்பட்டதைவிட, புறக்கணிக்கப்பட்ட சம்பவம்தான் அதிகம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறாத நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர் ஒருவர், அவரின் சாதனையை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதை ஷேர் செய்து, அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்" இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சனை அணியில் மட்டும் எடுத்திருக்கக் கூடாது. இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும். சூர்யகுமாரை விட கேரள அணிக்கு, ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டனாக பணியாற்றி அனுபவம் அதிகம்.

    கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு தேர்வுக்குழு இதுகுறித்து விளக்கம் அளிப்பது அவசியம். மேலும், சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • 2021-ல் இருந்து இந்திய டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    இதற்கிடையே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

    ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    ஏறக்குறைய இந்தியாவின் "பி" அணி என்று நினைத்து செய்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லையா? அல்லது தோல்வியின் விரக்தியில் கலந்து கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், முதன்முறையாக இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு இது ஏமாற்றதை அளித்திருக்கும்.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
    • ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார்.

    விசாகப்பட்டினம்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவில் 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின்னர் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

    தற்போது அந்த அணி இந்திய மண்ணில் 5 இருபது ஒவர் போட்டி தொடரில் ஆடுகிறது. ஒருநாள் போட்டி தொடரின் தொடர்ச்சியாக 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (23-ந்தேதி) நடக்கிறது.

    உலகக் கோப்பையில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

    இரு அணிகள் மோதிய கடைசி 5 இருபது ஓவர் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக உள்ளார். உலகக் கோப்பை யில் ஆடிய டிரெவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித்,ஜோஸ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா , அபோட் ஆகியோர் 20 ஓவர் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், ஆஸ்திரேலியா 10-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான்கிஷன், ஜெய்ஷ்வால், ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே, திலக் வர்மா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்தீப்சிங், அவேஷ்கான், முகேஷ்குமார், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்.

    ஆஸ்திரேலியா:-

    மேத்யூ வேட் (கேப்டன்), டிரெவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோ னிஸ், டிம் டேவிட், பெகரன் டார்ப், ஜோஸ் இங்லிஸ், தன்வீர் சங்கா, அபோட், நாதன் எல்லிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, மேத்யூ ஷார்ட்.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
    • இதற்கான அணியில் சாஹல் இடம் பிடிக்கவில்லை.

    ஆசிய கோப்பைக்கான தொடரிலும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது யுஸ்வேந்திர சாஹல் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த பதிவு வைரலானது.

    இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான அணியிலும் சாஹல் இடம் பிடிக்கவில்லை.

    இந்த சூழலில் அவர் எக்ஸ் தளத்தில் சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கு சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    மும்பை:

    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம் பின்வருமாறு;-

    மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெரும்பாலான ரசிகர்கள், இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியாதா?... என தலையில் அடித்துக் கொண்டனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.

    ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதை உயிர்ப்போகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுபோன்ற விபரீத முடிவு எடுக்கப்பட்டு வருவதுதான் துரதிருஷ்டவசமானது. வேதனைக்குரியது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
    • விசாகப்பட்டினத்தில் நாளைமறுதினம் முதல் போட்டி நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் (நவம்பர் 23) முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அணி விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கி சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை  நேசிக்கிறோம். அடுத்ததை வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.
    • முகமது சிராஜ் புதுப்பந்தில் பும்ராவுடன் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை.

    உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியா, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.

    1. சுப்மன் கில் சொற்ப ரன்களில் அவுட்

    இந்த தொடரில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, அவருக்கு துணையாக சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் ஸ்டார்க் பந்தில் தேவையில்லாமல் ஆஃப் சைடு வந்த பந்தை லெக்சைடு தூக்கி அடிக்க முயற்சி செய்து, மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்தார். அவர் 5-வது ஓவரில் ஆட்டமிழக்க, விராட் கோலி உடனடியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா 10-வது ஓவரில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் அய்யரும் விரைவாக களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுப்மன் கில் சுமார் 10 ஓவரை வரையாவது நிலைத்து நின்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்திருக்கும்.

    2. மிடில் ஓவரில் மந்தமான ஸ்கோர்

    10.3-வது ஓவரில் விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11-வது ஓவரில் இருந்து 20 ஓவர் வரை இந்தியாவுக்கு 35 ரன்கள், 21-வது ஓவரில் இருந்து 30-வது ஓவர் வரை 37 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் மட்டுமே கிடைத்தது. 10-வது ஓவருக்குப் பிறகு 4 பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தது.

    3  சூர்யகுமார் யாதவை பின்னால் வைத்தது

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும்போது, சூர்யகுமாருக்கு பதிலாக ஜடேஜா களம் இறக்கப்பட்டார். ஜடேஜாவால் 22 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஒருவேளை கே.எல். ராகுல் உடன் ஜோடி சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால், அவரால் அதிரடியாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. என்றபோதிலும், போட்டி முடிவடைவதற்கு 15 பந்துகளுக்கு முன்னதாக 28 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்டார். கடைசி வரை நின்றிருந்தால் கூடுதல் ரன்கள் வந்திருக்கலாம்

    4. முகமது சிராஜிக்கு புதிய பந்தில் பந்து வீச வாய்ப்பு வழங்காதது

    தொடர் முழுவதும் பும்ரா உடன் முகமது சிராஜ் புது பந்தில் பந்து வீசி வந்தார். இந்த போட்டியில் பும்ரா உடன் முகமது சமி பந்து வீசினார். இந்தியா 3 விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தியது. என்றாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய நிலையில், முகமது சிராஜால் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவர் புதுப்பந்தில் சிறப்பாகத்தான் பந்து வீசி வந்தார். இதுவும் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது எனலாம்.

    5. ஆக்ரோசமான தாக்குதல் இல்லாமல் போனது

    எப்போதும் துடிப்புடன் விளையாடும் இந்திய அணி ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவை 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது. அதன்பின் டிராவிஸ் ஹெட் (137)- லபுஷேன் (58*) ஆகியோரை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டனர். இவர்கள் 192 ரன்கள் குவித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துவிட்டது.

    • மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் அடித்தது தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாகும்.
    • முகமது சமி 24 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடரில் முத்திரை படைத்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.

    1. விராட் கோலி (765) அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    2. மேக்ஸ்வெல் (201*) தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்

    3. டி கா (4) அதிக சதம் அடித்த வீரர்

    4. ரோகித் சர்மா (31) அதிக சிக்ஸ் அடித்த வீரர்

    5. முகமது சமி (24) அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

    6. முகமது சமி (7/57) ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

    7. டி காக் (20) அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்

    8. டேரில் மிட்செல் (11) அதிக கேட்ச் பிடித்த பீல்டர்

    அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது

    1. மொஹிந்தர் அமர்நாத் (1983)

    2. அரவிந்த டி சில்வா (1996)

    3. ஷேன் வார்னே (1999)

    4. டிராவிஸ் ஹெட் (2023)

    இறுதிப் போட்டியில் மட்டும் தோற்கடிக்கப்பட்ட அணி

    1. இங்கிலாந்து (197- 4 வெற்றிகள்)

    2. நியூசிலாந்து (2015- 8 வெற்றிகள்)

    3. இந்தியா (2023- 10 வெற்றிகள்)

    • ஐசிசி-யின் இரண்டு இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
    • இவரது தலைமையில் இந்திய சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி தோல்வி அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    ராகுல் டிராவிட் இரண்டு ஐசிசி-யின் இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். எதிர்கால பயிற்சியாளர் பதவி குறித்தும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிவற்றில் ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் "என்னுடைய பதவியின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போதுதான் இந்த போட்டியில் இருந்து வெளியே வந்துள்ளேன். அது குறித்து யோசிக்க நேரம் இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அது குறித்து யோசிப்பேன். இந்த நேரம் வரை, இந்த தொடரில்தான் முழுக் கவனம் செலுத்தினேன். இதைத்தவிர என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எதையும் நினைக்கவில்லை" என்றார்.

    ×