என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » homemade snacks
நீங்கள் தேடியது "HomeMade Snacks"
தென் இந்திய பகுதிகளில் கிடைக்கும் மைசூர்பாகு போன்றதுதான். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மிக பிரபலமான இனிப்பான மோகன்தால் செய்வது சுலபம்.
தேவையான பொருட்கள் :
இதற்கு கடலை மாவு- 2 கப்,
நெய் - 3 டீஸ்பூன்
பால் - 3 டீஸ்பூன்,
நெய் - 1 கப் தனியாக,
சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - கால் கப்,
செய்முறை :
கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.
சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.
பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.
இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.
பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்
சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.
இதற்கு கடலை மாவு- 2 கப்,
நெய் - 3 டீஸ்பூன்
பால் - 3 டீஸ்பூன்,
நெய் - 1 கப் தனியாக,
சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - கால் கப்,
ஏலக்காய் தூள், குங்குமப்பூ - கொஞ்சம்
செய்முறை :
கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.
சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.
பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.
இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.
பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்
சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தீபாவளி பலகாரங்களில் இனிப்புகளை போன்று கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்,
பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய் பால் - ¼ கப்,
செய்முறை :
வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.
அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
அரிசி மாவு - 2 கப்,
பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய் பால் - ¼ கப்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.
அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை நட்சத்திர வடிவிலான அச்சில் போட்டு வட்டவடிவமாக பிழிந்து விட்டால் மகிழம்பூ முறுக்கு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு தேன்குழல் முறுக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - அரை கிலோ
தோல் நீக்கிய முழு உளுந்து - 150 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
பச்சரிசியை தண்ணீரில் அலசி கழுவிவிட்டு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.
உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் மாவாக இடித்து சலித்துக்கொள்ளவும்.
பின்னர் மாவுடன் பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெயும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து அச்சில் போட்டு கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
பச்சரிசி - அரை கிலோ
தோல் நீக்கிய முழு உளுந்து - 150 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
பச்சரிசியை தண்ணீரில் அலசி கழுவிவிட்டு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.
உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் மாவாக இடித்து சலித்துக்கொள்ளவும்.
பின்னர் மாவுடன் பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெயும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து அச்சில் போட்டு கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
சூப்பரான தேன்குழல் முறுக்கு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாலக் கீரை - 3 கப்
கடலை மாவு - 1 ½ கப்
அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
புதினா இலை - 12
கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.
பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.
பாலக் கீரை - 3 கப்
கடலை மாவு - 1 ½ கப்
அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
புதினா இலை - 12
கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.
பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.
சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன், பன்னீர் சேர்த்து கபாப் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சோளம் - 2
உருளை கிழங்கு - 1 கப்
பன்னீர் - 1/2 கப்
நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
இஞ்சி - சிறிது
கொத்தமல்லி - தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
செய்முறை :
சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.
சோளம் - 2
உருளை கிழங்கு - 1 கப்
பன்னீர் - 1/2 கப்
நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
இஞ்சி - சிறிது
கொத்தமல்லி - தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை :
சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.
சூப்பரான கார்ன் - பன்னீர் கபாப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - சிறிய துண்டு
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.
இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - சிறிய துண்டு
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.
இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் செய்த ரசம் மீந்து விட்டால் மாலையில் அதில் பருப்பு வடை செய்து சேர்த்து ரசம் வடையாக சாப்பிடலாம். இன்று இந்த ரசம் வடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - ¾ கப்
வெங்காயம் - 1
சிவப்பு மிளகாய் - 3
சீரகம் - ¾ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - 3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
புளி - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் - 3
கொத்தமல்லி / தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - சில
செய்முறை
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.
மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.
கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.
சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து, கலந்து அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.
அருமையான ரசம் பருப்பு வடை ரெடி.
குறிப்பு :
காலையில் செய்த ரசத்திலும் இதை செய்யலாம்.
ரசம் அல்லது வடை, இரண்டில் ஒன்று சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலை பருப்பு - ¾ கப்
வெங்காயம் - 1
சிவப்பு மிளகாய் - 3
சீரகம் - ¾ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - 3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
புளி - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயம் - ⅛ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் - 3
கொத்தமல்லி / தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - சில
செய்முறை
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.
மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.
கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கலக்கவும்.
சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து, கலந்து அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.
அருமையான ரசம் பருப்பு வடை ரெடி.
குறிப்பு :
காலையில் செய்த ரசத்திலும் இதை செய்யலாம்.
ரசம் அல்லது வடை, இரண்டில் ஒன்று சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டீ, காபியுடன் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். இன்று மொறுமொறு சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த சேமியா - 200 கிராம்
வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
அரிசி மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.
மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வறுத்த சேமியா - 200 கிராம்
வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
அரிசி மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.
மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளியமுறையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணை அல்லது நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய் (உருக்கி ஊற்றவும்), உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முறுக்கு குழலில், ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும். இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.
சூப்பரான ரிப்பன் பக்கோடா ரெடி.
கவனிக்க: மிளகாய்த்தூளிற்குப் பதிலாக, மிளகுத்தூளையும் போடலாம். விருப்பமானால், ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம். அரிசி மாவு அதிகமாக சேர்க்கும் பொழுது, நல்ல மொரமொரப்பாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணை அல்லது நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய் (உருக்கி ஊற்றவும்), உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முறுக்கு குழலில், ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும். இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.
சூப்பரான ரிப்பன் பக்கோடா ரெடி.
கவனிக்க: மிளகாய்த்தூளிற்குப் பதிலாக, மிளகுத்தூளையும் போடலாம். விருப்பமானால், ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம். அரிசி மாவு அதிகமாக சேர்க்கும் பொழுது, நல்ல மொரமொரப்பாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காரசாரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். இன்று இந்த சுவையான கோதுமை துக்கடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 400 கிராம்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு - 5
கல் உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும். சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது. பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும். அவ்வப்போது சதுரத்துண்டுகளை போட்டு கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் அடங்கியதும் எடுத்து விடவும்.
சுவையான கோதுமை துக்கடா தயார்.
இது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 400 கிராம்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு - 5
கல் உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும். சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது. பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும். அவ்வப்போது சதுரத்துண்டுகளை போட்டு கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் அடங்கியதும் எடுத்து விடவும்.
சுவையான கோதுமை துக்கடா தயார்.
இது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
வெங்காயம் - 2
கேரட் துருவல் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நூடுல்ஸ் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
வெங்காயம் - 2
கேரட் துருவல் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X