search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holy Water"

    • திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.
    • பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள உருத்திரா பதீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முதல் நாள் மாலை திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.

    2 வது நாள் கோ பூஜை, ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், முதல் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது 3வது நாள் 2 -ம் கால வேள்வியும் அதனைத் தொடர்ந்து

    விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது விழாவில் ரெகுநாதபுரம் பொதுமக்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு அடுத்த மணக்குடியில் உலகநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹுதி நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர், உலகநாயகி அம்பாள், விநாயகர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 8 கால யாகசாலை பூஜைகள், பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர்.

    திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத தலமாகும். காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோவிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் தற்போது கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20கோடி செலவில் நடைபெற்று வந்தது.

    முத்துசட்டை நாதர்சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல்மண்டபம், கருங்கல்பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்து கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்துமுடிந்தது.

    இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி-அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமானகலசம் உள்ளிட்டவைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, சவுந்தர்ராஜன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷே கத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. மேலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உஷா தலைமையில் பல்வேறு மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுப்பட்டனர்.

    • கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு காலயாக சாலை பூஜைகளை தொடர்ந்து, ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    குடமுழுக்கு விழா நிகழ்ச்சியில் அகரமாங்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்களை ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர்.

    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீசுவரர் கோவிலில் மகா கும்பாபிஷே விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோவில் அருகே பிரமாண்ட யாகசாலை அமைத்து மூலவர் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூலவர் விமான கலசங்கள் மற்றும் பரிவார விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நிறைவாக கலசத்திற்கு பட்டு வஸ்திரம், பூ மாலை சாற்றி ஏக முக கற்பூர ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம், மானாமதுரை பிரித்தியங்கிரா கோவில் சுவாமி ஞானசேகரன், ஸ்தபதி சண்முகம், சிவகங்கை தேவஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார், துணைத்தலைவர் சிவகாமி ராஜிபிள்ளை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, ரமேஷ் சுவாமி, முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லப்பா குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி. நமச்சிவாயம், டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் பூபதி ராஜா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வரசித்தி விநாயகர் கோயிலுக்கு முதலில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
    • கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு சென்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், கீழையூர் கிராமம் உடையாருப்புத் தெருவில் அமைந்துயிருக்கும் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு முதலில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சுந்தர விநாயகர் கோயிலுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீ உத்திராபதியார் கோயிலுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனவீரபாண்டியன் மற்றும் தெருவாசிகள் தலைமையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதற்கு முன்பாக விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜை நேற்று பூர்ணகதி செய்து கடம் புறம்பாடு நடைபெற்றது.

    அப்போது சுந்தரமூர்த்தி கசிவாச்சாரியார் தலைமையிலான விக்னேஷ்வர் குருக்கள் மற்றும் வேத விற்பனர்கள் சிவ ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓத வான வேடிக்கையுடன் கடம் புறப்பாடு கோயிலை வளம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு சென்றது அப்போது கருடன் வட்டமிட பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்ப கடத்தில் உள்ள புனித நீரை எடுத்து கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள உத்திராபதியார் சிவலிங்கத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் லத்தீஸ் சஞ்சீவா கும்பலே குடும்பத்தார்கள், விழா குழு தலைவர்கள் ராசு என்கின்ற நாகராஜ், சீனிவாசன், கலியபெருமாள், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் திருவாளர் சுந்தரி ஜெயச்சந்திரன், துணை தலைவர் அனிதா வீரப்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் சியாமளா ஸ்ரீதர், முன்னாள் கிராம உதவியாளர் சேகர், சுந்தரம், நம்பிராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மேகநாதன், மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கஜாரண்யேஸ்வரர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அமந்தாளம்மன் கோவில் (சப்தமாதா) ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    விழாவை யொட்டி கோவில்களின் அருகில் யாகசாலை அமைக்க ப்பட்டு காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம், கோ பூஜை, தனபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

    3 கால யாகசாலை பூஜைகள் நிறைவேற்ற பட்டவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    காலையில் அமந்தாளம்மன் கோவில் குடமுழுக்கும், அதனை தொடர்ந்து லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கும், அடுத்ததாக காமாட்சி அம்பாள் சமேத கஜாரண்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

    தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் கோபிசெட்டிபாளையம் சிவகடாட்சதேசிக சாமிகள், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை கஜாரண்யேஸ்வரர்- காமாட்சி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    பாதுகாப்பு ஏற்பா டுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அடுத்த காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் மிக பழமைவாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    2,3-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர்.

    கோவில் குருக்கள் சண்முக சுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர், கருவறையில் உள்ள காலபைரவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் ஊராட்சி தலைவர் ஜோதிவள்ள ராஜேந்திரன், துணை தலைவர் சரவணன், வி.ஏ.ஓ. சிவராமன் மற்றும் விழா குழுவினர்கள், கிராமமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.
    • கோபுர விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளை உள்ளது.

    இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 19-ஆம் தேதி எஜமான அனுக்ஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    ஆறுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் நடைபெற்ற 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் பாலச்சந்தர் சிவாச்சாரியர், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.

    அப்போது கருடன் வட்டமிட, வேத விற்பன்னர்கள் சிவ ஆகமங்கள் முறைப்படி மந்திரங்கள் ஓத, பக்தர்கள் முருகா முருகா என கோஷங்கள் எழுப்ப, மேளதாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்,

    வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் முன்னிலையில் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கருவறையில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணியருக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் மேலாளர் சண்முகம், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, மாயூரநாதர் பெரிய கோயில் காசாளர் வெங்கடேசன், நகரமன்ற தலைவர் செல்வராஜ், தருமபுரம் கல்லூரிச் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் என ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவில் கிணற்றில் உள்ள நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற தலம் என்ற சிறப்புடைய ஆம்ல குஜாம்பிகா எனும் வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

    இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம். தேவார சிறப்புமிக்க 274 திருத்தலங்களில் மூவரால் பாடப்பட்ட 44 தலங்களில் இதுவும் ஒன்றாக போற்றப்படுகிறது.

    இக்கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நாளில் கோயில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும். இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் கோயில் கிணற்றில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்ம புரீஸ்வரர் ஆகிய சாமிக ளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் கிணற்றில் இருந்து வாரி இறைக்கப்பட்ட தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.

    இந்த தீர்த்தவாரி விழாவில் கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோ ட்டை அருகே ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த பெரியகோடகுடி கிராமத்தில் மிகப்பழமை யான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் தர்ம முனீஸ்வரர், ஆகாச வீரன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 5:30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப சபா சுவாமிக்கு, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, ஆசிர்வாதம் தீபாரணை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், திருப்பட்டு சாற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 ஆயிர த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×