search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெகுநாதபுரம் உருத்திராபதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
    X

    மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    ரெகுநாதபுரம் உருத்திராபதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

    • திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.
    • பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள உருத்திரா பதீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முதல் நாள் மாலை திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.

    2 வது நாள் கோ பூஜை, ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், முதல் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது 3வது நாள் 2 -ம் கால வேள்வியும் அதனைத் தொடர்ந்து

    விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது விழாவில் ரெகுநாதபுரம் பொதுமக்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    Next Story
    ×