என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காளகஸ்திநாதபுரம், காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம்
- 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அடுத்த காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் மிக பழமைவாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
2,3-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர்.
கோவில் குருக்கள் சண்முக சுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர், கருவறையில் உள்ள காலபைரவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் ஊராட்சி தலைவர் ஜோதிவள்ள ராஜேந்திரன், துணை தலைவர் சரவணன், வி.ஏ.ஓ. சிவராமன் மற்றும் விழா குழுவினர்கள், கிராமமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்