search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×