search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலசம்"

    • 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்திபெற்ற மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம், சுவாமி- அம்பாள் கருவறை கோபுரங்கள், பரிவார தேவதைகள் கோபுரங்கள் உள்ளிட்ட 84 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர் 3-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்காக 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல மோதாளங்கள் முழங்க மயிலாடுதுறை காவேரி நகர் பாலத்தில் இருந்து 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. இதில் திருவாவடுதுறை கட்டளை தம்புரான் வெள்ளப்ப சுவாமிகள், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

    • திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.
    • பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள உருத்திரா பதீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முதல் நாள் மாலை திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.

    2 வது நாள் கோ பூஜை, ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், முதல் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது 3வது நாள் 2 -ம் கால வேள்வியும் அதனைத் தொடர்ந்து

    விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது விழாவில் ரெகுநாதபுரம் பொதுமக்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாயகரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைமஹா தான தெருவில்உள்ள ருக்குமணி சத்தியாபாமா உடனாகிய வேணுகோபால சாமி கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவிற்கு அம்பாபாய் டிரஸ்ட் மற்றும் விழாக்குழு தலைவர் பிரபாகர் தலைமையில் நாகராஜா ஆச்சாரியார் முன்னிலையில் தண்தரசா ரெந்தம் மத்வாச்சாரியா முறைப்படி ஐந்து காலயாகசாலை பூஜைகளுடன் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கிருஷ்ணா.. கிருஷ்ணா.. என கோஷம் எழுப்பினர்.

    பின்னர், வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் கருவறையில் உள்ள கிருஷ்ணன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவில் உள் வளாகத்தின் மையத்தில் கருடன், துளசி மாடம், வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாய கரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.

    விழாவில் ஆர்.எஸ்.கே. பாண்டுரெங்கன், நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார், நகர மன்ற உறுப்பினர் காந்திமதி தனபால், கலியமூர்த்தி, கவி மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள திரவுபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×