search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "happiness"

    • மதுரையில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அதிகமாக காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்க ளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

    அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் இந்த தாக்கம் இன்று காணப்பட்டது அதிகாலை முதல் கருமேகங்கள் வானில் சூழ்ந்து சூரியனை மறைத்ததுடன் வாட்டி வதைத்த வெயிலுக்கும் இன்று 'குட்பை' சொல்லும் வகையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    மதுரை நகரில் விமான நிலையம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், காமராஜர் சாலை, தெப்பக்குளம், அவனியாபுரம், தமுக்கம், மாட்டுத்தாவணி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    திடீர் மழை காரணமாக சில நாட்களாக இருந்த வெப்பமும் தணிந்து குளுமையான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    • இது போன்ற இயக்க பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
    • மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தம் நகரில் மாநகர தி.மு.க. அலுவலகம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன் , எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம் , அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் எங்கு சென்றாலும் தி.மு.க‌.விற்க்கென்று அலுவலகம் இருப்பது அவசியம். மாவட்டங்களில் மாவட்ட கழக அலுவலகங்கள் இருப்பது போல் தஞ்சையில் மாநகர தி.மு.க‌.வுக்கென்று புதிய அலுவலகம் திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாள் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், இது போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.

    கனமழை, மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப் ஒன்று உள்ளது.

    அதை கவனித்து வருவோம். மழைகாலங்களில் தேவைக்கேற்ப்ப பள்ளிகள், மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர்.

    நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனை அடுத்து சாலியமங்களத்தில் இருந்து பாபநாசம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்றது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது

    பாபநாசம் சாலியமங்களம் முக்கிய நெடுஞ்சாலையில் தினசரிநூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன அதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது சாலையை விரிவாக்கம் செய்து அகலமாக சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதனால் இந்த சாலையை பயன்படுத்தகூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நினைக்கிறோம் என தெரிவித்தனர்.

    • அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல்வேளையில் கடுமையான வெப்பம் காணப்பட்டது.
    • ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர், அவினாசி, காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 4 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்தது. இந்த மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்த ஓடியது. அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல்வேளையில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் 5 மணிவரை அவினாசி, வேலாயுத ம்பாளையம், பழங்கரை, தெக்கலூர், கருவலூர், ஆட்டையாம்பாளையம், உள்வட்ட பல கிராமங்களில் கனமழையும், சிறிது நேரம் சாரல் மழையும் பெய்தது. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. காங்கயம் காங்கயத்தில் மாலை 3.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளான நெய்க்காரன்பாளையம், ஆலம்பாடி, நால்ரோடு, கீரனூர், பரஞ்சேர்வழி உட்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் 4 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து கனமழை பெய்தது. மழையானது 1½ மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகள், கால்வாய்கள் ஆகிய இடங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காங்கயம் நகர பகுதிகளில் லேசான தூறல் மழையே பெய்தது. தூறல் மழையானது இரவு முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பள்ளியில் படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
    • மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளியில் தங்கள் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

    • தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் கிராம மக்கள், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

    எனவே, இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது. இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பாலம் அமைக்கக்கோரி போராடிய அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ×