search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Camp"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி னார்கள்.

    கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து, உரிய துறை அலு வலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டுமென அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூகப் பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுலவலர் மணி மேகலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள். மனுக்க ளைப் பெற்ற டி.ஆர்.ஓ, அவற்றை உரிய அலுவலர்க ளிடம் வழங்கி, மனுக்களை விரைந்து பரி சீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதி காரிகள் கலந்துகொண்ட னர்.

    • மதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம்.

    நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்த மங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8-ந் தேதி) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்- புல்லங்குடி (நியாய விலைக்கடை, ராமேசுவரம் வட்டம்-அரியாங்குண்டு - (இ-சேவை மைய கட்டிடம்), திருவாடானை வட்டம் - புதுப்பட்டினம் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - வாலங்குடி (இ-சேவை மைய கட்டிடம்.

    முதுகுளத்தூர் வட்டம் -வெங்கலக்குறிச்சி (நியாயவிலைக்கடை), கடலாடி வட்டம் வாலி நோக்கம் (நியாய விலைக்கடை), கமுதி வட்டம்- தலவநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி).

    கீழக்கரை வட்டம் குளபதம் (நியாய விலைக் கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - ஆப்பிராய் (நியாய விலைக் கடை) ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.6ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டிலான தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

    2021-22-ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 சமுதாய அமைப்பி னர்களுக்கு மொத்தம் ரூ.4லட்சத்திற்கான ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தீர்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து மனுதாரர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு, சேந்தமங்கலம் வசந்த மஹாலில் நடைபெறுகிறது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையி லான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு, சேந்தமங்கலம் வசந்த மஹாலில் நடைபெறுகிறது.

    இச்சிறப்பு குறைதீர் முகாமில், மாற்றுத்திற னாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையி லான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. இந்நாளில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யு.டி.ஐ.டி. பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டப் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்ப டும்.

    இந்த உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு போட்டோ-4, ரேசன் கார்டு நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன், மாற்றுத்தி றனாளிகள் முகாமில் கலந்துக்கொண்டு பயனடை யலாம்.

    ஏற்கனவே, மாற்றுத்திற னாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்க ளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயனடைய லாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மேனகா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 229 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பம் செய்த, திருச்செங்கோடு தாலுகா, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரது மனுவினை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த கலெக்டர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் இந்த முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் திருச்சுழியைச் சேர்ந்த சோனைபாண்டி என்ற பெண் தனக்கு சுயதொழில் புரிய தையல் எந்திரம் வழங்ககோரி இந்த கூட்டத்தில் மனு அளித்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக அவருக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், கலெக்டரின்நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கலால்) அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 28-ந் தேதி(செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவல கத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள்.இதில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தின் அனைத்து துறை தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட

    அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 272 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்க ளிடம் வழங்கி விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை, கலெக்டர் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது, காதொலிக் கருவி கோரி மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்த கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,800/- வீதம், மொத்தம் ரூ.5,600/- மதிப்பில் 2 காதொலிக் கருவிகளை அவர்களுக்கு வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மனுக்கள் கொடுத்த உடனேயே காதொலி கருவி வழங்கிய மாவட்ட

    கலெக்டருக்கு பயனாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×