என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 220 மனுக்கள் பெறப்பட்டன
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
- அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுலவலர் மணி மேகலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள். மனுக்க ளைப் பெற்ற டி.ஆர்.ஓ, அவற்றை உரிய அலுவலர்க ளிடம் வழங்கி, மனுக்களை விரைந்து பரி சீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதி காரிகள் கலந்துகொண்ட னர்.






