search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram Sabha meeting"

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயிகளின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதையொட்டி அப்பகுதில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயி களின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் நிலங்களை கையகப்படுத்தி னால், வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜ.க, கொ.ம.தே.க, தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மே தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும், நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மோகனூர் ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படும். விவசாயமும் பாதிக்கப்படும். அதனால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, விவசாயிகள் சார்பில் தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர்.

    தீர்மானத்தை பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் சரஸ்வதி, கிராமசபை தீர்மான நோட்டில், சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எழுதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த கிராம சபை கூட்டத்தில், இதே தீர்மா னத்தை நிறைவேற்ற முடியாது என ஊராட்சி தலைவர் கூறியிருந்த நிலையில், நேற்று பொது மக்கள் வலியுறுத்திய தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
    • கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற மே 1-ந் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டிற்கான கிராம சபைக்கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-2024), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • கடலாடி யூனியனுக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
    • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உலக தண்ணீர் தினம் கொண்டா டப்பட்டது. இதையொட்டி வாலிநோக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பீர்முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முகமது பனத்வாலா, ஊராட்சி செயலர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது.

    இதே போல் கண்டிலானில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தலைமையிலும் ஏ.புன வாசலில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், காணிக்கூரில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்ல பாண்டியன் தலை மையிலும், பெரியகுளத்தில் ஊராட்சி தலைவர் முத்துமாரி தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.கன்னிராஜபுரத்தில் ஊராட்சி தலைவர் சுப்பிர மணியன் தலைமையிலும், நரிப்பையூரில் ஊராட்சித் தலைவர் நாராயணன் தலைமையிலும், செவல்பட்டியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து தலைமையிலும், எஸ். தரைக்குடியில் ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமையிலும்,

    டி.வேப்பங்குளத்தில் ஊராட்சி தலைவர் முருகன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

    அஞ்சடைநாதபுரத்தில் ஊராட்சி தலைவர் லிங்க ராஜ் தலைமையிலும், டி.கரிசல்குளத்தில் ஊராட்சி தலைவர் அப்பனசாமி தலைமையிலும், எஸ்.கிரந்தையில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், எஸ்.வாகைக்குளத்தில் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வடமலை தலைமையிலும், பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீர பாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    கடுகு சந்தையில் ஊராட்சித் தலைவர் காளிமுத்து தலைமையிலும், மேல செல்வனூரில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், கீழ செல்வனூரில் ஊராட்சித் தலைவர் இப்பால் தலைமையிலும், மேல கிடாரத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தலைமை யிலும், கொத்தங்குளத்தில் ஊராட்சித் தலைவர் கணேசன் தலைமையிலும், சிக்கலில் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் தலைமையிலும், இதம் பாடலில் ஊராட்சி தலைவர் மங்களசாமி தலைமையிலும், பீ.கிரந்தையில் ஊராட்சி தலைவர் ஆனந்தம்மாள் அற்புதராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    டி.மாரியூரில் ஊராட்சித் தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமையிலும், ஏனாதியில் ஊராட்சி தலைவர் பாரதி ராஜா தலைமையிலும், ஒருவானேந்தலில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையிலும் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

    • குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
    • குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    பல்லடம் :

    உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்ப ட்டதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட ப்பட்டு இருந்தது. அதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி, அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதேபோல செம்மிபா ளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமை யிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையி லும், மல்லேகவுண்ட ம்பாளை யத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    உலக தண்ணீர் தினத்தையொட்டி தஞ்சாவூர் ஒன்றியம் மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சித் மன்ற தலைவர் அம்மாசெல்லம் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் உதயன், ஒன்றிய கவுன்சிலர் ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது; -

    உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.

    ஊராட்சியை எப்போது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முடிந்தவரை வீட்டு வரி, சொத்து வரியை இணையவழியில் பெற வேண்டும். பெறப்பட்ட கோரிக்கைகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா,  பூதலுார் தாசில்தார் பெர்ஷியா உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வைத்தார்.

    ஊராட்சி செயலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    அப்போது சிறப்பு (பற்றாளர்) அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கீதா கலந்து கொண்டு பேசினார்.

    தண்ணியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீரை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது.

    சுகாதாரமாக இருக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நடைபெற்று வரும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எடுத்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சங்கீதா நாராயணன் நன்றி கூறினார்.

    • சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. தலைவர் கலியுகநாதன் தலைமை வகித்தார். துணைதலைவர் செல்வி, பற்றாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம், கருவுற்ற தாய்மார்கள் மாதாந்திர தடுப்பூசி, குழந்தை திருமணம், கால்நடை தடுப்பூசி முகாம் உள்ளிட்ட வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதேபோல் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜென்சிராணி, பானாமூப்பன்பட்டி ஊராட்சி தலைவர் மகாராஜன், ஏரவார்பட்டி ஊராட்சி தலைவர் பாண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி யூனிய னுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செயலர் ஓய்யணன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன் தலைமையில் செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார். முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமையில் துணை தலைவர் ராஜா முன்னிலையில் மனோபாரதி அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார்.கருப்பட்டி ஊராட்சி தலைவர் அம்பிகா தலைமையில் செயலர் முனியாண்டி அறிக்கை வாசித்தார்.

    இரும்பாடி ஊராட்சி ஈஸ்வரி தலைமையில் செயலர் காசி அறிக்கை வாசித்தார். நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி தலைமையில் செயலர் வேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமையில் செயலர் ரேவதி அறிக்கை வாசி த்தார். திருவாலவாய நல்லூர் ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் செயலர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    • அதிகாரிகள் வரவில்லை என குற்றச்சாட்டு
    • குறைகளை கேட்காமல் எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமையில் நடைபெற்றது.

    மேலும் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் தேவை எனவும் கடந்த 6 மாதமாக நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் நிரந்தரமான செயலாளர் இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதனால் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளும் தோய்வில் உள்ளதாகவும், இதனை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்று பார்த்து வருவதாகவும், மேலும் இதனால் பணிகள் முழுதுமாக பூர்த்தி செய்ய முடியவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    எனவே இந்த மாதத்திற்க்குள் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லை எணில் வருகின்ற மே மாதம் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் அதே ஊராட்சியில் பணியாற்றி வரும் வருவாய்துறை அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் என யாரும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் நாங்கள் என்ன தீர்மானம் வைக்க போறோம் என்பதை தெரியாமல் எங்கள் குறைகளை எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசமாக ஊர் பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம்.

    மதுரை

    இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் துரைராஜ், ஊராட்சி செயலர் சசிகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் பேசும்போது கூறிய தாவது:-

    நமது ஊராட்சியில் தண்ணீர் தேவைகளை மக்கள் அறிகிற வண்ணம் ஓவியங்களாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்காங்கே வரைந்து வைத்துள்ளோம். நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம். மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் தேவையான அளவிற்கு பயன்படுத்த வேண்டும். ஆதி காலத்தில் மக்கள் ஏரி, குளங்களில் நீர் எடுத்து வந்த நிலைமையை நாம் அறிந்திருக்கிறோம், தெரிந்திருக்கிறோம். பின்னர் கிணறு வெட்டி அதில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்தினர்.

    தற்போது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடங்களிலும் குடிநீர் வசதி செய்ய திட்டங்கள் தீட்டி யுள்ளார். விரைவில் லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் வர இருக்கிறது.

    தற்போது வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு சிறந்த முறையில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் மூர்த்திக்கும், கலெக்ட ருக்கும், கூடுதல் கலெக்டரு க்கும் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கிராம சபை கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சியில் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் கணக்கு தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது.
    • சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கபடுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்திலு ள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 22 ந்தேதி நாளை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்க ளில் நடைபெ றவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும்,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதி க்கபடுகிறது.மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் (சம்மந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரும்) மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சி களின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவா தித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    எனவே வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    ×