search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டங்கள்
    X

    வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் பீர்முகம்மது தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    கிராம சபை கூட்டங்கள்

    • கடலாடி யூனியனுக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
    • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உலக தண்ணீர் தினம் கொண்டா டப்பட்டது. இதையொட்டி வாலிநோக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பீர்முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முகமது பனத்வாலா, ஊராட்சி செயலர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது.

    இதே போல் கண்டிலானில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தலைமையிலும் ஏ.புன வாசலில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், காணிக்கூரில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்ல பாண்டியன் தலை மையிலும், பெரியகுளத்தில் ஊராட்சி தலைவர் முத்துமாரி தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.கன்னிராஜபுரத்தில் ஊராட்சி தலைவர் சுப்பிர மணியன் தலைமையிலும், நரிப்பையூரில் ஊராட்சித் தலைவர் நாராயணன் தலைமையிலும், செவல்பட்டியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து தலைமையிலும், எஸ். தரைக்குடியில் ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமையிலும்,

    டி.வேப்பங்குளத்தில் ஊராட்சி தலைவர் முருகன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

    அஞ்சடைநாதபுரத்தில் ஊராட்சி தலைவர் லிங்க ராஜ் தலைமையிலும், டி.கரிசல்குளத்தில் ஊராட்சி தலைவர் அப்பனசாமி தலைமையிலும், எஸ்.கிரந்தையில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், எஸ்.வாகைக்குளத்தில் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வடமலை தலைமையிலும், பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீர பாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    கடுகு சந்தையில் ஊராட்சித் தலைவர் காளிமுத்து தலைமையிலும், மேல செல்வனூரில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், கீழ செல்வனூரில் ஊராட்சித் தலைவர் இப்பால் தலைமையிலும், மேல கிடாரத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தலைமை யிலும், கொத்தங்குளத்தில் ஊராட்சித் தலைவர் கணேசன் தலைமையிலும், சிக்கலில் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் தலைமையிலும், இதம் பாடலில் ஊராட்சி தலைவர் மங்களசாமி தலைமையிலும், பீ.கிரந்தையில் ஊராட்சி தலைவர் ஆனந்தம்மாள் அற்புதராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    டி.மாரியூரில் ஊராட்சித் தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமையிலும், ஏனாதியில் ஊராட்சி தலைவர் பாரதி ராஜா தலைமையிலும், ஒருவானேந்தலில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையிலும் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

    Next Story
    ×