search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram Sabha meeting"

    • கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் பார்வையாளராக கலந்து கொண்டார்.
    • ‘எல்லாருக்கும் எல்லாம்”கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்"கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஆற்றிய உரையினை மக்களுடன் இணைந்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.

    • தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.
    • அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,

    காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.

    மேலும் 130 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • சோழவந்தான்- உசிலம்பட்டியில் சுதந்திர தினவிழா, கிராமசபை கூட்டம் நடந்தது.
    • கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவி கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெய ராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார பணி ஆய்வாளர் முருகா னந்தம், வார்டு கவுன்சிலர் கள் வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் லதா கண்ணன் இனிப்பு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    நைனார் தொழுகை பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. எம்.வி.எம். கலைவாணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மருது பாண்டியன் தேசியகொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி ஆகி யோர் கலந்து கொண்டனர். அதேபோல் கல்வி இயக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கி னார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சி தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உழவர் உணவகத்தில் சேது தலைமையில் மன்னாடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஜெய்மா நர்சரி பள்ளியின் தாளாளர் கீதா, இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    முன்னாள் வர்த்த சங்க தலைவர் ஸ்ரீராமுலு அறக்கட்டளை சார்பாக 77-வது ுதந்திர தின விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் தலைமையில் முன்னாள் சேர்மன் முருகேசன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் பால முருகன் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் வரு வாய் அலுவலர் சதீஷ், தலைவர் ரம்யா நம்பிராஜன், கிராம நிர்வாக அலுவலர் முபாரக், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலு வலகத்தில் 77-வது சுதந்திர தின விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் தென் மொழி, நகராட்சி மேலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் சசிகலா, நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அஜித்பாண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மெய்யனம் பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவு, செலவு கணக்குகள் குறித்து பேசினார். இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உடுமலை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பால சுப்பிரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார்.

    இதே போன்று சின்னவீரன் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையிலும் பூலாங்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட மகிபாலன் பட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனியன் பூங்குன்றனாருக்கு மணி மண்டபம் அமைத்தல், அவரது பெயரில் பொது நூலகம் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். சமுதாயக்கூடம் கட்டுவது, கொன்னத்தான் கண்மாயில் தடுப்பணை கட்ட வேண்டும். எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    துவார் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அவசரகால தேவையை கருதி காட்டு வழிப்பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். பூலாம்பட்டியில் அங்கன்வாடி மையம், நீர்த்தேக்க மேல்தொ ட்டியை இடித்து புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    இதில் யூனியன் உதவியாளர் சதீஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு கட்டி போராட்டம் நடத்தினர்.
    • சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கையில் ஊராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அனுமதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியபிள்ளைபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் காளித்தாய். துணைத்தலைவராக உதயபிரகாஷ் என்பவரும், செயலாளராக ஜோதிபாசு என்பவரும் இருந்து வரு கின்றனர். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கூட்டத்தை நடத்த விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 100 நாள் திட்டப்பணியில் போலி பயனாளிகளை சேர்த்துள்ளதாகவும், இதனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி உண்மையான பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகு மான் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் பொது மக்கள் அதனை ஏற்றுக்கொ ள்ளாததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரெங்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காலை 11.30 மணிவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கூட்டத்தை நடத்த கூடாது என்றும், தீர்மானம் எதையும் நிறைவேற்ற க்கூடாது என்றும் பொது மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த ஊராட்சியின் செயலாளர் எஸ்.எஸ்.புரம் ஊராட்சியையும் கூடுதலாக கவனித்து வருவதால் அங்கு கூட்டத்தை முடித்துவிட்டு இங்கு வர தாமதமானது. இதனால்தான் அதிகாரிகள் வரதாமதமானது என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கூட்டம் நடத்தப்பட்டது.

    • போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு
    • போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் முன்ன ணியில் பொதுமக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    குருவிநத்தம் ராஜீவ் காந்தி மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை அறிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கிராம சபை கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அரசுக்கு எதிராக வும், அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகள் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் குருவிநத்தம், சோரியாங்குப்பம் பகுதியில் சுடுகாட்டுக்கு செல்ல பாலம் அமைத்து தரவும், சாலை வசதி குடிநீர் வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து கவர்னர், முதல்-அமைச்சர் எம்.எல்.ஏ.விடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காத தால் இன்று நடைபெற இந்த கிராம சபை கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வாயில் கருப்பு துணி அணிந்து கிராம சபை புதிய புறக்கணித்தனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது அரசு எதிராக கோஷ்மிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி யினரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் முன்ன ணியில் பொதுமக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்து உள்ள குருவிநத்தம் சோரி யாங்குப்பம் கிராமத்தில் பாலம் இல்லாமல் இறந்த வர்களின் உடலை இடுப்ப ளவு தண்ணீரில் நீந்தி சென்று அடக்கம் செய்யும் அவலம்,

    இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாத நாட்டிற்கு சுதந்திர தினம் ஒரு கேடா ...? என பாகூர் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடந்தது.
    • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான வருகிற 15-ந் தேதியன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட் சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மை யான குடிநீர் விநியோ கத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

    மேற்படி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும்.
    • பல்வேறு துறைகளில் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் கரையாம்புத்தூர் பஞ்சா யத்துக்கு, பனையடிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, மணமேடு- மந்தவெளி திடலிலும், குருவிநத்தம் - ராஜீவ் காந்தி திருமண மண்டபத்திலும், சோரி யாங்குப்பம் - செங்கழுநீர் அம்மன் கோவில் திடலிலும், பரிக்கல்பட்டு - கொமந்தான் மேடு வீரன் கோவில் திடலிலும், பாகூர் மேற்கு- பூலோக மாரியம்மன் கோவில் திடலிலும், பாகூர் கிழக்கு - கமலா நேரு திருமண மண்டபத்தி லும், சேலியமேடு - மாரியம்மன் கோவில் திடல், குடியிருப்பு பாளையம் - கிராம பஞ்சாயத்து அலுவல கத்திலும், கிருமாம் பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், பனித்திட்டு கலைய ரங்கத்திலும், பிள்ளை யார்குப்பம் - காட்டுக் குப்பம் அரசு ஆரம்ப பள்ளியிலும், மணப்பட்டு - கன்னிய கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் எதிரிலும், மதி

    கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் திடல் ஆகிய 14 கிராம பஞ்சாயத்துகளிலும்   10 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    மேலும், அரசால் பல்வேறு துறைகளில் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும், இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
    • தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

    கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,

    தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழிதலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை கள், பிளாஸ்டிக்கை தவிரத்து மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தில் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    எனவே ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத த்தில், தங்களது கருத்து க்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.

    • உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்ப நாயக்கன்வலசு கிராம ஊராட்சி சார்பில் கருப்பன் வலசு புதூரில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால் கல்வித்துறை சார்பில் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    ×