search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் மக்கள் வாக்குவாதம்
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டியில் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் மக்கள் வாக்குவாதம்

    • 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியபிள்ளைபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் காளித்தாய். துணைத்தலைவராக உதயபிரகாஷ் என்பவரும், செயலாளராக ஜோதிபாசு என்பவரும் இருந்து வரு கின்றனர். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கூட்டத்தை நடத்த விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 100 நாள் திட்டப்பணியில் போலி பயனாளிகளை சேர்த்துள்ளதாகவும், இதனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி உண்மையான பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகு மான் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் பொது மக்கள் அதனை ஏற்றுக்கொ ள்ளாததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரெங்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காலை 11.30 மணிவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கூட்டத்தை நடத்த கூடாது என்றும், தீர்மானம் எதையும் நிறைவேற்ற க்கூடாது என்றும் பொது மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த ஊராட்சியின் செயலாளர் எஸ்.எஸ்.புரம் ஊராட்சியையும் கூடுதலாக கவனித்து வருவதால் அங்கு கூட்டத்தை முடித்துவிட்டு இங்கு வர தாமதமானது. இதனால்தான் அதிகாரிகள் வரதாமதமானது என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கூட்டம் நடத்தப்பட்டது.

    Next Story
    ×