search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினவிழா- கிராமசபை கூட்டம்
    X

    உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சகுந்தலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    சுதந்திர தினவிழா- கிராமசபை கூட்டம்

    • சோழவந்தான்- உசிலம்பட்டியில் சுதந்திர தினவிழா, கிராமசபை கூட்டம் நடந்தது.
    • கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவி கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெய ராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார பணி ஆய்வாளர் முருகா னந்தம், வார்டு கவுன்சிலர் கள் வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் லதா கண்ணன் இனிப்பு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    நைனார் தொழுகை பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. எம்.வி.எம். கலைவாணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மருது பாண்டியன் தேசியகொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி ஆகி யோர் கலந்து கொண்டனர். அதேபோல் கல்வி இயக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கி னார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சி தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உழவர் உணவகத்தில் சேது தலைமையில் மன்னாடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஜெய்மா நர்சரி பள்ளியின் தாளாளர் கீதா, இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    முன்னாள் வர்த்த சங்க தலைவர் ஸ்ரீராமுலு அறக்கட்டளை சார்பாக 77-வது ுதந்திர தின விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் தலைமையில் முன்னாள் சேர்மன் முருகேசன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் பால முருகன் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் வரு வாய் அலுவலர் சதீஷ், தலைவர் ரம்யா நம்பிராஜன், கிராம நிர்வாக அலுவலர் முபாரக், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலு வலகத்தில் 77-வது சுதந்திர தின விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் தென் மொழி, நகராட்சி மேலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் சசிகலா, நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அஜித்பாண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மெய்யனம் பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவு, செலவு கணக்குகள் குறித்து பேசினார். இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×