search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் கிராமசபைக் கூட்டத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
    X

    கிராமசபை கூட்டத்தில் கருப்பு துணி கட்டியும், கையில் பதாகைகளை வைத்தும் பங்கேற்ற பொதுமக்கள்.

    சின்னமனூரில் கிராமசபைக் கூட்டத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

    • பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு கட்டி போராட்டம் நடத்தினர்.
    • சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கையில் ஊராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அனுமதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×