search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபா கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கூறிய பொதுமக்கள்
    X

    வேப்பஙகுப்பம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்த காட்சி.

    கிராம சபா கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கூறிய பொதுமக்கள்

    • அதிகாரிகள் வரவில்லை என குற்றச்சாட்டு
    • குறைகளை கேட்காமல் எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமையில் நடைபெற்றது.

    மேலும் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் தேவை எனவும் கடந்த 6 மாதமாக நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் நிரந்தரமான செயலாளர் இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதனால் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளும் தோய்வில் உள்ளதாகவும், இதனை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்று பார்த்து வருவதாகவும், மேலும் இதனால் பணிகள் முழுதுமாக பூர்த்தி செய்ய முடியவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    எனவே இந்த மாதத்திற்க்குள் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லை எணில் வருகின்ற மே மாதம் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் அதே ஊராட்சியில் பணியாற்றி வரும் வருவாய்துறை அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் என யாரும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் நாங்கள் என்ன தீர்மானம் வைக்க போறோம் என்பதை தெரியாமல் எங்கள் குறைகளை எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசமாக ஊர் பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×