search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
    X

    சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

    • சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. தலைவர் கலியுகநாதன் தலைமை வகித்தார். துணைதலைவர் செல்வி, பற்றாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம், கருவுற்ற தாய்மார்கள் மாதாந்திர தடுப்பூசி, குழந்தை திருமணம், கால்நடை தடுப்பூசி முகாம் உள்ளிட்ட வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதேபோல் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜென்சிராணி, பானாமூப்பன்பட்டி ஊராட்சி தலைவர் மகாராஜன், ஏரவார்பட்டி ஊராட்சி தலைவர் பாண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி யூனிய னுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செயலர் ஓய்யணன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன் தலைமையில் செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார். முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமையில் துணை தலைவர் ராஜா முன்னிலையில் மனோபாரதி அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார்.கருப்பட்டி ஊராட்சி தலைவர் அம்பிகா தலைமையில் செயலர் முனியாண்டி அறிக்கை வாசித்தார்.

    இரும்பாடி ஊராட்சி ஈஸ்வரி தலைமையில் செயலர் காசி அறிக்கை வாசித்தார். நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி தலைமையில் செயலர் வேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமையில் செயலர் ரேவதி அறிக்கை வாசி த்தார். திருவாலவாய நல்லூர் ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் செயலர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    Next Story
    ×