search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village panchayats"

    • காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது.
    • சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கபடுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்திலு ள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 22 ந்தேதி நாளை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்க ளில் நடைபெ றவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும்,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதி க்கபடுகிறது.மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் (சம்மந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரும்) மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சி களின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
    • நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×