search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village council meetings"

    • சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற பாடலை தந்த கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான "பூங்குன்ற நாடு" என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    முன்னதாக ஊராட்சி வரவு செலவு கணக்குகள் கிராம மக்கள் முன்னி லையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாருக்கு திருப்பத் தூர் பொன்னமராவதி செல்லும் சாலையில் மகிபாலன்பட்டி விலக்கு ரோட்டின் முன்பு அவருக்கென்று நினைவு வளைவு ஒன்றை எழுப்புதல், பிறந்த ஊரான இம்மண்ணில் மணிமண்ட பம் ஒன்று அமைத்தல், மேலும் மகிபாலன் பட்டிய லில் இருந்து வேலங்குடி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதி பாதையை தார் சாலையாக மாற்றுதல், சமுதாய கூடம் கட்டுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    கொன்னத்தான்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மன்ற தலைவர் அழகு பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கொன்னத்தான் பட்டி மற்றும் துவார் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கும் அயிரக்குடி பெரிய கண்மாயிக்கு பருவ மழை காலங்களில் தண்ணீர் வரும் விருசுளி ஆற்றின் வரத்து கால்வாயின் குறுக்கே ஆயகட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய தடுப்பணை கட்டுதல்,சமுதாய கூடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்,அனைத்துசமுதாயத்தினருக்கான பொது மயான கரையில் தண்ணீர் தொட்டி கட்டுதல், 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொன்னைத்தான் குடிநீர்ஊரணி சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து அதன் உள்ளே தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டங்களில் ஊராட்சி மன்ற செயலர்கள், வார்டு உறுப்பினர்கள், அங்கன் வாடி பணியா ளர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், கிராம பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவ லர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • செட்டிக்குறிச்சியில் பிரபாகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 கிராம ஊராட்சி களில் கிராமசபை கூட்டம் நடந்தது. செட்டிக் குறிச்சி யில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகுமலை கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வனஜா வரவேற்றார். பற்றாளராக சமூகநல அலுவலர் திராவிடச்செல்வி, தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சிஅலுவலர் காஜா மைதீன் பந்தேநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அருணா சலபுரம் சமத்துவபுரத்தில் இருந்து செட்டிக்குறிச்சிக்கு பொதுமக்கள் வந்து செல்ல சாலைவசதி வேண்டும் என்றும், மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டால் கிராம உதவியாளர் ஒருமையில் பேசுவதாகவும் பொதுமக்கள், தாசில்தார் அறிவழகனிடம் புகார் தெரிவித்தனர். தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலும் சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மனை பிரிவு அங்கீகாரம், கட்டிட அனுமதி போன்றவை இணைய வழி மூலம் செலுத்த தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரி விவரங்கள், கைபேசி எண் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக வரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் தெரிவித்தார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களை தொடர்ந்து நேற்று உள்ளாட்சி தினத்தை யொட்டி இந்த கூட்டம் நடந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழக அரசு உத்தரவின்படி. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கூட்டம் நடந்தது.

    இதில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெ ச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி ஊராட்சியில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து சிறந்த ஆட்சியாளராகவும், ஜெயலலிதா போன்றும் உருவாக்க வேண்டும். ஜெயலலிதா 7 மொழிகள் பேசக் கூடியவர்.

    அவரை போல் பெண் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கிராம ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முத்துகுமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விட்டனேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விட்டனேரியில் இருந்து செல்லும் அய்யம்பட்டிக்கு மெட்டல் சாலை, சாத்தனி பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் சாலை, புதிய அங்கன்வாடி கட்டிடம், உடையவயல் பள்ளியில் சுற்றுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூய்மை பணியா ளர்களுக்கு ரொக்க பரிசும், மகளிர் குழுக்களுக்கு சால்வையும் அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மரியாதை செலுத்தினார். ஊராட்சி செயலாளர் முருகப்பன், தலைமை ஆசிரியர், மகளிர் குழுக்கள், வருவாய் துறை ஒன்றிய அலுவலர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும், அரசு பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    கிராம மக்களின் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, அதி காரிகளும், ஊராட்சி மன்ற தலைவரும் பதில் அளித்தனர். இதில் பேசிய மாணவர்கள், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக அமைந்த தாகவும், மக்களின் தேவை யும், அதிகாரிகளின் பதிலும் அரசின் நடவடிக்கையை தங்களுக்கு வெளிப்படு த்தியதாகவும் தெரிவித்தனர்.

    இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உறுதியளித்தார்.

    மேலும் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

    வாணியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புவனேசுவரி சுரேஷ்குமார் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவ பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
    • நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×