என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபைக் கூட்டம்"

    • நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
    • டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    வணக்கம். எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

    நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான். உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது 3-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.

    உங்களில் நிறைய பேர் சுய உதவிக்குழுக்களால் பயனடைந்திருப்பார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோது, நானே பல மணிநேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கியிருக்கிறேன்.

    இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகதான், மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறோம். நீங்கள் எல்லோரும் கட்டணமில்லாமல் பஸ்சில் செல்கிறீர்களே, அந்த விடியல் பயணத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள்…

    நீங்கள் காலையில், சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள்.. அதற்கு நடுவில் சமையல் செய்யவேண்டும்.. ஆனால், அந்த சுமையை குறைக்க – அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற நம்முடைய குழந்தைகளுக்கு சத்தாகவும் – சுவையாகவும் காலை உணவு வழங்குகிறோம்.

    நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் காலேஜ் முடித்துவிட்டு வேலைக்குப் செல்வதற்கு தயாராக இருக்கின்ற அளவுக்கு – நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம்.

    நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு துறையிலும், பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

    இவையெல்லாம் முத்திரைத் திட்டங்கள். இதே போல, கிராம வளர்ச்சிக்கு என்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்.

    அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்ற முக்கிய தருணம்.

    நம்முடைய கிராமங்களின் தற்போதைய தேவைகள், வளர்ச்சி இலக்குகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

    நம்முடைய திராவிட மாடல் அரசு - சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப் பெயர்கள் இருந்தால், அதை மாற்றி பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மேலும், 'நம்ம ஊர், நம்ம அரசு' என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

    குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-ல் இதுவரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின்கீழ், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது.

    தாயுமானவர் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    நம்முடைய வீடு குப்பைக் கூளமாக இருந்தால், சும்மாவா இருப்போம்? நம் எல்லோருடைய வீடும் சேர்ந்ததுதான் நம்முடைய கிராமம்… அதை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பு நமக்குதான் இருக்கிறது. முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்… குப்பைகள் – ஊராட்சிகளில் வரு கின்ற பேட்டரி வண்டிகளில், மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துப் போடவேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஊராட்சி நிர்வாகங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை பிரிப்பது, கழிவுநீர் மேலாண்மை பற்றியெல் லாம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    என்னடா, இதையெல்லாம் சிறிய சிறிய விஷயம் தானே, இதையெல்லாம் முதலமைச்சர் சொல்ல வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? சிறிய சிறிய விஷயங்களை நாம் கரெக்டாக செய்தாலே, பெரிய பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்று எல்லோருக்குமே தெரியும். இந்த நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படை.

    அடுத்து, மக்களுடைய முக்கிய பிரச்சனையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. "பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்" என்று சில பேர் சொல்லுவார்கள்… உண்மையில், "தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்".

    தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது. இதனால் தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது.

    எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம்.

    அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது - கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறை வேற்றப்படும்.

    நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதி செய்கின்ற அரசு இது.

    "கிராமத்தின் வலிமை தான் மாநிலத்தின் வலிமை" என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார்.
    • எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியொட்டி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது ரேவதி என்ற பெண்ணிடம் அவர் கலந்துரையாடினார்.

    அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தில் ஊராட்சியில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள். அதே போல் முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார். அதற்கு அப்பெண் 24 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர் என கூறினார்.

    தொடர்ந்து அவர் சுயஉதவி குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். இக்குழுவானது ஊராட்சி அளவில் தொழில் கடனாக ரூ.1.50 லட்சம் வழங்கியது. அதில் நான் 2 தையல் எந்திரம் வாங்கி கடை நடத்தி வருகிறேன். அதில் இருந்து வரும் வருமானத்தில் எனது குடும்ப செலவிற்கும், குழந்தைகள் படிப்பு செலவிற்கும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போல் உள்ள 2 மகளிருக்கு இந்த தொழிலை கற்று கொடுத்து அவர்களையும் வேலைக்கு வைத்துள்ளேன். என்னாலும் 2 பேருக்கு வேலை வழங்கி சம்பளம் வழங்கி வருவதை பெருமையாக தெரிவிக்கிறேன்.

    தொடர்ந்து 3 கோரிக்கைகளை அவர் தெரிவித்தார். அதில் எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது. அதனை புதுப்பித்து தர வேண்டும். அதேபோல், கொண்டாங்கியில் இருந்து ஈச்சத்திரம் சாலையில் மின்விளக்கு அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொண்டாங்கி முதல் தொகைப்பாடி வரை சாலை பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து அவர் எங்கள் மகளிர் குழு கொரோனா காலத்தில் ரூ.7 லட்சம் கூட்டுறவு சங்கத்தில் வங்கி கடன் வாங்கி இருந்தோம். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு அந்த கடனை தள்ளுபடி செய்தீர்கள் அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்ற தெரிவித்தார்.

    • பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அளவில் விடியல் பயணம் பங்காற்றுகிறது.
    • கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

     

    எல்லோரும் நல்லா இருக்கீங்களா என பொதுமக்களிடம் கேட்டு தனது உரையை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என கூறினார் காந்தியடிகள்.

    * மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா.

    * அண்ணா காட்டிய பாதையில் கலைஞர் கருணாநிதி உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்தினார்.

    * தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்து கிராம சபை கூட்டங்களை நடத்துவது இதுவே முதல்முறை.

    * பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அளவில் விடியல் பயணம் பங்காற்றுகிறது.

    * மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * குழந்தைகள் அனைவரும் படிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    * நாம் தான் நமது கிராமத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    * 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    * பல்வேறு திட்டங்களின் கீழ் 21 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தி உள்ளோம்.

    * சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலையாட்டி வருகிறது திராவிட மாடல் அரசு.

    * கிராமங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    * சின்ன சின்ன விஷயங்களை செய்தால் பெரிய பெரிய நன்மைகள் வந்து சேரும்.

    * கிராமங்களை சுத்தமாக வைத்திருப்பதில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

    * தண்ணீரை பணம் போன்று பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும்.

    * மழை நீரை சேமிக்கும் பொறுப்பு நாம் அனைவரிடம் உள்ளது.

    * இழிவான தன்மையுடன் சாலை பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    * மக்கள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    • கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

    கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவது, மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான 26-ந் தேதி (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 31.12.2022 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். எனவே 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது.
    • சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கபடுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்திலு ள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 22 ந்தேதி நாளை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்க ளில் நடைபெ றவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும்,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதி க்கபடுகிறது.மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் (சம்மந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரும்) மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சி களின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • மாத்தூர் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சியில் மே தினத்தையெட்டி கிராம சபைக் கூட்டம் தலைவர் லட்சுமி பாபு தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் கமலக்கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:-

    நமது ஊராட்சிக்கு செய்யாற்று குடிநீர் கொண்டு வர கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இடையில் கூடுதல் செலவாக 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கபட்டது.

    ஆனால் இவ்வளவு நிதி ஒதுக்கியும் மாத்தூருக்கு குடிநீர் மட்டும் வரவில்லை. என, கேள்வி எழுப்பினர்.

    இங்கு கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் அதிகாரியே பதில் சொல்லலாமே.

    மேலும் காலம் தாழ்த்தாமல் செய்யாற்று குடிநீரை மாத்தூருக்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    செய்யாற்று குடிநீர் கொண்டு வந்ததற்காக மாங்கால் கூட்ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், மாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தரைதள நீர்தேக்க தொட்டியும் வீணாகித் தான் கிடக்கிறது.

    கடந்த முறை நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் செய்யாற்று குடிநீர் திட்டத்தைப் பற்றியே முன் வைத்தோம் ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அதிகாரிகளான நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என, சரமரியான கேள்வியை எழுப்பினர். இதனால் கிராம சபையில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது.

    கிணற்றேரி, மாத்தேரி, சித்தேரி ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    இதற்கான தீர்மானமும் கிராம சபையில் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில், ஊராட்சி முன்னாள் பொறுப்பாளர்களான பன்னீர் செல்வம், தேவராஜ், செல்வம், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, புனிதா, விஜயலட்சுமி, சுரேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

    • 251 கிராம ஊராட்சிகளில் தொழி லாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது.
    • இலளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழி லாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத்தால் நியமிக்க ப்பட்ட பார்வையாளர் கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

    இதையடுத்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், இலளிகம் கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், இக்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தலைமையேற்று எங்கள் கிராமம்! எழில்மிகு கிராமம்!! என்ற உறுதிமொழியினை வாசிக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்கா ளர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹி முகமது நசீர், துணை ஆட்சியர் பயிற்சி செந்தில் குமார்,நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் புனிதம் பழனிசாமி, இலளிகம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ்குமார், துணைத் தலைவர் கிருஷ்ணன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதியன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2023 முதல் 31.07.2023 முடிய) செலவின அறிக்கை குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல்,

    தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்த விவரத்தை முன்வைத்தல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், ஜல்ஜீவன் இயக்கத்தில் பணிகள் குறித்த விவரத்தினை உறுதி செய்தல்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகள் குறித்து விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் வேலை அட்டைகள் வழங்கியதை உறுதி செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொ ருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    • தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.
    • அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,

    காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.

    மேலும் 130 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    ×