search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "God story"

    • கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.
    • முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.

    மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.

    பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார்.

    அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.

    சிவப்பு வண்ணப் பட்டாடைகளையும், சிவப்பு கலந்த ஆபரணங்களையும் அணிவிக்கலாம்.

    முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

    • நவராத்திரி அன்று அர்ச்சனை செய்ய வேண்டிய மந்திரம்
    • ஓம் மங்கள நாயகியே போற்றி!

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    • முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
    • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.

    முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.

    அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.

    பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....

    • பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
    • எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.

    ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.

    அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.

    ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    • இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது.
    • வெற்றிலைமாலை சார்த்தி வழிபட்டால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.

    96 நாளில் வேண்டுதல்கள் நிறைவேறும் அதிசயம்

    சென்னையில் பல பகுதிகளில் வீரபத்திரர் ஆலயங்கள் சிறப்பாக உள்ளன.

    அவற்றில் ராயபுரம் குமாரசாமி சந்தில் இருக்கும் "அருள்மிகு பத்ரகாளி அம்மன் வீரபத்திரர் ஆலயம்" தனிச்சிறப்புகள் கொண்டது.

    தற்போது இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஆலயத்தில் கடந்த 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது.

    வைஷ்ணவி, பிரம்மி, மகேஸ்வரி ஆகியோரது சிலைகளும் உள்ளன.

    தெட்சிணாமூர்த்தி, பைரவரும் இங்கு வழிபட படுகின்றனர்.

    இத்தலத்து வீரபத்திரர் சுமார் 9 அடி உயரத்துக்கு கம்பீரமாக உள்ளார்.

    இவர் இத்தலத்துக்குள் பூமிக்குள் இருந்து கிடைத்தவர் என்பது குறிப்பிடத்தக்து.

    இவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்தால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.

    இதனால் ஏராளமான பக்தர்கள், வெகு தொலைவில் இருந்து கூட வந்து செல்கிறார்கள்.

    ராகுவுக்கு அதிபதி துர்க்கை.

    துர்க்கைக்கு அதிபதி காளி.

    இதனால் இத்தலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது.

    காளஹஸ்தி செல்ல இயலாதவர்கள் இங்கு அந்த பூஜைகளை செய்து பலன் பெறலாம்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று இத்தலத்தில் 10 நாள் விழா நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலை 5 மணிக்கு வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    • இது அகத்தியர் வழிபட்ட தலமாகும்.
    • தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார்.

    செல்வம் தரும் ஐஸ்வர்ய வீரபத்திரர்

    சென்னை வில்லிவாக்கத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் இங்குள்ள சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் பெயரில் மூலவராக இருக்கிறார்.

    பரமசிவனுக்கும் பார்வதிதேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைபெற்ற போது தேவர்களும், சித்தர்களும், ரிஷி களும், யோகிகளும் ஒரே இடத்தில் கூடியதால் தென்நாடு உயர்ந்து வடநாடு தாழ்ந்தது.

    இதனை சமப்படுத்த அகத்தியரை சிவபெருமான் தென்நாட்டுக்கு அனுப்பினார்.

    தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார்.

    வில்வலன், வாதாபி என்ற இரண்டு அசுர சகோதரர்களில் வாதாபியை அழித்து, வில்லவனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனைக் காட்டினார்.

    இதனால் இத்தலம் வில்லிவாக்கம் என்று வழங்கப்படுகிறது.

    அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது அம்பாள் திருமண கோலத்தில் பொன் நகைகள் அணிந்திருந்தாள்.

    எனவே அவள் ஸ்வர்ணாம்பிகை எனப்படுகிறாள்.

    நவக்கிரகங்களில் அங்காரகன் [செவ்வாய்] தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கத் தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது.

    அதனால் செவ்வாய் தோஷப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

    இங்கு தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.

    ஆடி மாதம் ஐந்து வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கே வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

    வீரபத்திரருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளது.

    குபேர திசை நோக்கி வீரபத்திரர் அமர்ந்துள்ளதால் ஜஸ்வர்ய வீரபத்திரர் என்றும் பெயர் உள்ளது.

    அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்வாசல் எதிரே வீரபத்திரர் உள்ளார்.

    கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவர் அருகே வணங்கிய கோலத்தில் தட்சன் உள்ளார்.

    முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது.

    இங்குள்ள விநாயகரிடம் செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

    பஞ்சமாபாதகரும் இத்தலத்தை அடைந்தவுடன் தூய்மை அடைவார் என்று இதன் தலபுராணம் கூறுகிறது.

    • வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.
    • எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.

    தென்காசி கோவில் வீரபத்திரர்

    வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் அழைக்கப்படுகிறார்.

    வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.

    சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான்.

    இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதிகளை அழிப்பதற்காக வீரபத்திரரை படைத்தான் என்று குறிப்பிடுவர்.

    வீரபத்திரரை திருஞானசம் பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சூட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.

    சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவ வடிவ மாகவும் கண்டு வழிபட்டு வருகிறார்கள்.

    வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாக கொண்டு போற்றி வழிபடுகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருவானைக்காவு என பல்வேறு இடங்களில் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

    அவற்றில் மிகவும் கலைநயமிக்க வகையில் தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.

    ஆனால் தென்காசி கோவிலில் மட்டும் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை.

    எப்போதும் நடைபெறுவது போல் பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது.

    அனைத்து கோவில்களிலும் சப்தகன்னிகள் அருகே வீரபத்திரர் சந்நதி அமைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இங்கு மட்டும் தூணில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

    • பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    ஆண்கள் மட்டுமே வழிபடும் கயத்தாறு வீரபத்திரர் கோவில்

    நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தை குளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில்.

    இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான்.

    மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடைகளை செய்கின்றனர்.

    பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.

    • ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.
    • ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.

    வீரபத்திரருக்கு சந்தனப்பொட்டு

    வீரபத்திரருக்குப் பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் சந்தனத்தைக் குழைத்துப் பொட்டு வைப்பார்கள்.

    அபிஷேகம் முடிந்தவுடன் மூச்சினை அடக்கி, சந்தனம் அரைத்து சுவாமியின் நெற்றியில் இடுதல் வேண்டும்.

    ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.

    ஸ்ரீ வீரபத்ர மாகாளிக்கு மார்பு, நெற்றி, கன்னம், தோள், நாடி, உச்சி, கை, பாதங்களில் சந்தனப் பொட்டிடலாம்.

    ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.

    கணு மரம் என்பது 40&50 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரமாகும்.

    ஸ்ரீவீரபத்திரர் பிரதான மூர்த்தியாகவோ உற்சவ மூர்த்தியாகவோ இருந்தால், "கனகப்பட்டை" எனப்படும் 70&80 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரக் கட்டைகளிலிருந்து அரைக்கப்படும் சந்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    சந்தனம் அரைக்கும் போதோ சுவாமிக்குப் பொட்டிடும் போதோ சந்தனத்தின் மீதும் சுவாமியின் மீதும் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

    அதே போன்று ஸ்ரீவீரபத்திரரின் மார்பில் வைத்த சந்தனப் பொட்டு மீது எந்த காரணம் கொண்டும் குங்குமம் வைக்கக்கூடாது.

    • இதையொட்டி அவருக்குக் கரையில்லாத வெள்ளாடைகள் அணிவிக்கின்றனர்.
    • செந்நிற உடையும் மாறி, மாறி அணிவிக்கின்றனர்.

    வீரபத்திரருக்கான உடைகள்-கம்பளி ஆடை

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள விரபத்திரருக்கு கம்பளி ஆடை அணிவித்தால் வேண்டுதல்கள் விரைவில் ஈடேறும்.

    வெள்ளை நிற உடை

    சிவ பெருமானின் பொருட்டு தக்கயாகத்தை அழிக்கச் சென்ற வீரபத்திரர் வெள்ளை ஆடைகளை அணிந்து சென்றார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி அவருக்குக் கரையில்லாத வெள்ளாடைகள் அணிவிக்கின்றனர்.

    சிவகங்கை கீழாயூர் ஸ்ரீ வீரபத்திரசுவாமி கோவில், வீரவநல்லூர் அங்காள பரமேசுவரி கோவில், கிளாக்குளம் அங்காள பரமேசுவரி கோவில்,

    கும்பகோணம் வீரசைவ மடம் வீரபத்திரசுவாமி கோவில், திருநாகேசுவரம் கீழவடம் போகித் தெரு வீரபத்திர சுவாமி கோவில், கங்கை கொண்ட சோழபுரம் வீரபத்திரசுவாமி கோவில்,

    பகத்தூர் வீரபத்திரசுவாமி கோவில், திருக்கழுக்குன்றம் வேதபுரிசுவரர் கோவில், காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெரு வீரபத்திரசுவாமி கோவில்,

    சென்னை கொத்தவால்சாவடி வீரபத்திரசுவாமி கோவில் போன்ற பல கோவில்களில் வீரபத்திரருக்கு வெள்ளை நிற உடையை அணிவிக்கின்றனர்.

    தனநாயக்கன் கோட்டை வீரபத்திரசுவாமி கோவில், அம்மாப்பேட்டை வீரபத்திரசுவாமி கோவில் திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோவில் ஆகியவற்றில் வெள்ளை உடையையும், செந்நிற உடையும் மாறி, மாறி அணிவிக்கின்றனர்.

    திருவேங்கடம் சடை வீரபத்திரசுவாமி கோவிலில், குல தெய்வ வழிபாட்டின் போதும், நேர்த்திக்கடன் வழிபாட்டின் போதும்,

    வீரபத்திரருக்கு 10க்கு 6 என்ற அளவுடைய முழு வெள்ளை நிற வேட்டியையே அணிவிக்கின்றனர்.

    அதனால் மனக்குழப்பங்களும், போராட்டங்களும் ஏற்படும் என்பதால் மார்பில் குங்குமம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    ×